தமிழகம் வரும் மோடி – உற்சாகத்தில் பாஜகவினர்!
Mar 15, 2026, 03:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகம் வரும் மோடி – உற்சாகத்தில் பாஜகவினர்!

Murugesan M by Murugesan M
Nov 1, 2023, 04:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரையில் கலந்து கொள்ள பாரதப் பிரதமர் மோடி வருகை தர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பாஜகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ஊழலுக்கு எதிராகவும், மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக்க தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவை பெறும் வகையிலும் , என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த யாத்திரையை தொடங்கினார். ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா யாத்திரையை தொடங்கி வைத்தார். மொத்தம் 5 கட்டங்களாக 168 நாட்கள் இந்த யாத்திரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிக்கும் என் மண் என் மக்கள் யாத்திரை செல்ல உள்ளது. 1,700 கிலோ மீட்டர் கால் நடையாகவும், 900 கிலோ மீட்டர் வாகனத்திலும் யாத்திரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த யாத்திரையானது சென்னையில் நிறைவடையவுள்ளது. ஜனவரி 11 -ம் தேதிக்குள் யாத்திரையை முடிக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. இதுவரை 51 நாள் யாத்திரை வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாத யாத்திரை பொதுமக்களிடம் மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தி உள்ளதால், அதன் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி சிறப்புரை வழங்க உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ராமேஸ்வரத்தில் புதிய ரயில் பாலத்தைத் திறந்து வைக்கவும், அதேபோல, குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளத்திற்குப் பாரதப் பிரதமர் மோடி நேரில் அடிக்கல் நாட்டவும் உள்ளார் என்று கூறப்படுகிறது.

பாரதப் பிரதமர் வருகையை மத்திய பாஜக தலைமையோ அல்லது தமிழக பாஜக தலமையோ அல்லது மத்திய அரசோ இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. ஆனால், விரைவில் இது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி வருகைதர உள்ளார் என்ற தகவல் வெளியானதும் பாஜகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

ஆளுநர் ஆர்.என். ரவியுடன் நார்வே தூதர் திடீர் சந்திப்பு!

Next Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : புள்ளி பட்டியல் விவரம் !

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies