ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் அணிவகுப்பு ஊர்வலம்!
Jul 26, 2025, 12:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் அணிவகுப்பு ஊர்வலம்!

தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவு! - சென்னை உயர் நீதிமன்றம்.

Web Desk by Web Desk
Nov 1, 2023, 06:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆர்.எஸ்.எஸ் தொடங்கப்பட்ட நாளான விஜயதசமியை முன்னிட்டும், தேசத்திற்காகப் பாடுபட்ட மகான்கள் நினைவைப் போற்றும் வகையிலும், ஆண்டுதோறும் சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவது வழக்கம்.

காஷ்மீர் முதல் கேரளா, மேற்குவங்கம் என்று நாட்டின் அனைத்து பகுதிகளும் அணி வகுப்பு ஊர்வலங்கள் அமைதியாகவும், நேர்த்தியாகவும் நடைபெற்றது.

இந்த ஆண்டு விஜயதசமி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தத் தமிழகக் காவல்துறையிடம் 2 மாதங்களுக்கு முன்பு அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டும், அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தினர். சில மாவட்டங்களில் விண்ணப்பங்களை நிராகரித்தனர்.

இந்நிலையில், அக்டோபர் 22, 29 -ம் தேதிகளில் தமிழகத்தின் 35 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். சார்பில் தாக்கல் செய்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலங்களுக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்குமாறு கடந்த 16 -ம் தேதி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனாலும், காவல்துறை அனுமதிக்கவில்லை.

இதனால், ஆர்.எஸ்.எஸ். சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்.எஸ்.எஸ். சார்பில் மூத்த வழக்கறிஞர் ராஜகோபால் ஆஜராகி, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை என்பதால், வாதிட அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

காவல்துறை சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாகவும், அந்த மனு நாளை மறுநாள் விசாரணைக்கு வர உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, நீதிமன்றம் உத்தரவிட்டும் அணிவகுப்புக்கு அனுமதி அளிக்காதது அரசின் நிர்வாகத் திறமையை காட்டுவதாகவும் , நீதிமன்ற உத்தரவை அரசு மதிப்பளிக்க விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது என நீதிபதி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

மேலும், இது தொடர்பாக தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: chennai high courtRSS RALLY
ShareTweetSendShare
Previous Post

ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: செங்கடலில் படைகளை குவித்த இஸ்ரேல்!

Next Post

உலகின் சிறந்த நகரங்கள்: குவாலியர், கோழிக்கோடு தேர்வு!

Related News

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

சென்னை : இறுதி ஊர்வலத்தின் போது நாட்டு வெடி வெடித்து மாணவி படுகாயம்!

திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் போலீசார் அனுமதி வழங்குவதில்லை : இந்து முன்னணியினர் குற்றச்சாட்டு!

நாட்டை காக்க வீர மரணமடைந்த ராணுவ வீரர்களை நினைவுகூர்வோம் – நயினார் நாகேந்திரன்

மியான்மர் : கனமழையால் திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் – மக்கள் அவதி!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – இளைஞரின் புகைப்படம் வெளியீடு!

ராஜகோபுரம் எதிரில் உள்ள சக்கரை குளம் குடிகாரர்களின் கூடாரமாக மாறி உள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி!

ரிதன்யா வழக்கு – ஜாமீன் மனு குறித்து காவல்துறை பதிலளிக்க ஆணை!

யூடியூப், இன்ஸ்டாவுக்கு செக் வைத்த மஸ்க் : 9 ஆண்டுக்குப் பின் மீண்டு(ம்) வருகிறது VINE!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies