உலகின் சிறந்த நகரங்கள்: குவாலியர், கோழிக்கோடு தேர்வு!
Sep 13, 2026, 03:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகின் சிறந்த நகரங்கள்: குவாலியர், கோழிக்கோடு தேர்வு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 1, 2023, 06:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலகின் சிறந்த 55 நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த குவாலியர் மற்றும் கேரளாவின் கோழிக்கோடு ஆகிய நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவின், உலகின் சிறந்த நகரங்களின் பட்டியலில் ஏற்கெனவே 295 நகரங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த நிலையில், உலக நகரங்கள் தினத்தை முன்னிட்டு மேலும் 55 சிறந்த நகரங்களை தேர்ந்தெடுக்க யுனெஸ்கோ முடிவு செய்தது.

அதன்படி, யுனெஸ்கோவின் இயக்குனர் ஆட்ரி அசோலே தலைமையிலான குழு 55 நகரங்களை தேர்ந்தெடுத்திருக்கிறது. இந்த பட்டியலில் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த குவாலியர், கேரள மாநிலத்தைச் சேர்ந்த கோழிக்கோடு ஆகிய நகரங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்கள் தங்களது வளர்ச்சியில், கலச்சாரம் மற்றும் புதுமையை ஒன்றிணைத்து இயங்குவதாகவும், நகர்ப்புற வளார்ச்சிக்கு திட்டமிட்டு புதுமையான நடைமுறைகளைக் கொண்டு வந்திருப்பதாகவும் யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்திருக்கிறது. அந்த வகையில், குவாலியர் சிறந்த ‘இசை’ கலச்சாரத்தை பெற்றிருப்பதாகவும், கோழிக்கோடு ‘இலக்கியம்’ பிரிவில் இடம் பிடித்திருப்பதாகவும் யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்திருக்கிறது.

யுனெஸ்கோவின் கிரியேடிவ் சிட்டீஸ் அமைப்பு, கைவினை மற்றும் நாட்டுப்புறக் கலை, வடிவமைப்பு, திரைப்படம், உணவு, இலக்கியம், ஊடகக் கலை மற்றும் இசை ஆகிய 7 துறைகளின் அடிப்படையில் சிறந்த நகரங்களை தேர்ந்தெடுப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட இந்நகரங்கள் 2024 ஜூலை மாதம் போர்ச்சுகலில் நடக்கவிருக்கும் யுனெஸ்கோவின் கிரியேடிவ் சிட்டீஸின் மாநாட்டில் பங்கெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இம்மாநாட்டின் கருப்பொருள் அடுத்த 10 ஆண்டு காலத்துக்கு இளையதலைமுறைகளை முன்னிருத்தும் விதமாக இருக்கும் என்று யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்திருக்கிறது.

Tags: unescokozhikodeGwaliorcreative cities
Share
Tweet
SendShare
Previous Post

ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் அணிவகுப்பு ஊர்வலம்!

Next Post

லடாக் மக்கள் வீரத்திற்கும் புத்தர் மீதான நம்பிக்கைக்கும் பெயர் பெற்றவர்கள்! – குடியரசுத் தலைவர்.

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies