ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: செங்கடலில் படைகளை குவித்த இஸ்ரேல்!
Sep 10, 2025, 06:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: செங்கடலில் படைகளை குவித்த இஸ்ரேல்!

Web Desk by Web Desk
Nov 1, 2023, 06:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏமன் நாட்டிலிருந்து ஈரானிய ஹௌதி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேல் நாட்டின் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருவதால், இஸ்ரேல் இராணுவம் செங்கடலில் படைகளை குவித்திருக்கிறது.

இஸ்ரேல் நாட்டின் மீது காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் 7-ம் தேதி அறிவிக்கப்படாத போரை நிகழ்த்தினர். இதையடுத்து, இஸ்ரேல் பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது. 26-வது நாளாக இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இப்போரால் இஸ்ரேல் நாட்டில் 1,400 பேரும், காஸா நகரில் 8,500 பேரும் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், இஸ்ரேலில் 3,500 பேரும், காஸா நகரில் 22,000 பேரும் காயமடைந்திருக்கிறார்கள். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இதனிடையே, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும் இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கும் இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த சூழலில், ஏமன் நாட்டில் இருக்கும் ஹௌதி கிளர்ச்சியாளர்களும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இஸ்ரேல் நாட்டின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இத்தாக்குதல் செங்கடல் பகுதியில் நடத்தப்பட்டிருக்கிறது.

அந்த வகையில், நேற்று செங்கடல் பகுதியில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இதை இஸ்ரேலின் ஏரோ வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து தாக்கி அழித்திருக்கிறது. இதையடுத்து, இஸ்ரேல் இராணுவம் செங்கடல் பகுதியில் படைகளை பலப்படுத்தி வருகிறது.

இதுகுறித்து இஸ்ரேல் இராணுவம் கூறுகையில், ஏமனில் இருந்து ஈரானிய ஆதரவு ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தியதைத் தொடர்ந்து இன்று செங்கடல் பகுதியில் இஸ்ரேல் தனது கடற்படை இருப்பை பலப்படுத்தி இருக்கிறது. அதன்படி, இஸ்ரேல் கடற்படை மற்றும் வான் பாதுகாப்புப் படைகள், ஏவுகணை அழிப்பான்கள் செங்கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறது.

அதேபோல, இன்று அதிகாலையில் இஸ்ரேலின் தெற்கே நகரமான ஈலாட் அருகே மற்றொரு ஏவுகணைத் தாக்குதலையும் இஸ்ரேல் இராணுவம் இடைமறித்து அழித்திருக்கிறது. அதேபோல, அமெரிக்க கடற்படையின் நாசக்காரக் கப்பலான யு.எஸ்.எஸ். கார்னியும், ஏமனில் இருந்து இஸ்ரேலை குறிவைக்கக்கூடிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி வருகிறது என்று பென்டகன் தெரிவித்திருக்கிறது.

Tags: IsraelWar ShipsRed sea
ShareTweetSendShare
Previous Post

ஜப்பானை வீழ்த்திய இந்திய பெண்கள் !

Next Post

ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் அணிவகுப்பு ஊர்வலம்!

Related News

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies