ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: செங்கடலில் படைகளை குவித்த இஸ்ரேல்!
Jan 14, 2026, 08:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: செங்கடலில் படைகளை குவித்த இஸ்ரேல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 1, 2023, 06:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏமன் நாட்டிலிருந்து ஈரானிய ஹௌதி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேல் நாட்டின் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருவதால், இஸ்ரேல் இராணுவம் செங்கடலில் படைகளை குவித்திருக்கிறது.

இஸ்ரேல் நாட்டின் மீது காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் 7-ம் தேதி அறிவிக்கப்படாத போரை நிகழ்த்தினர். இதையடுத்து, இஸ்ரேல் பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது. 26-வது நாளாக இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இப்போரால் இஸ்ரேல் நாட்டில் 1,400 பேரும், காஸா நகரில் 8,500 பேரும் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், இஸ்ரேலில் 3,500 பேரும், காஸா நகரில் 22,000 பேரும் காயமடைந்திருக்கிறார்கள். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இதனிடையே, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும் இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கும் இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த சூழலில், ஏமன் நாட்டில் இருக்கும் ஹௌதி கிளர்ச்சியாளர்களும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இஸ்ரேல் நாட்டின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இத்தாக்குதல் செங்கடல் பகுதியில் நடத்தப்பட்டிருக்கிறது.

அந்த வகையில், நேற்று செங்கடல் பகுதியில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இதை இஸ்ரேலின் ஏரோ வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து தாக்கி அழித்திருக்கிறது. இதையடுத்து, இஸ்ரேல் இராணுவம் செங்கடல் பகுதியில் படைகளை பலப்படுத்தி வருகிறது.

இதுகுறித்து இஸ்ரேல் இராணுவம் கூறுகையில், ஏமனில் இருந்து ஈரானிய ஆதரவு ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தியதைத் தொடர்ந்து இன்று செங்கடல் பகுதியில் இஸ்ரேல் தனது கடற்படை இருப்பை பலப்படுத்தி இருக்கிறது. அதன்படி, இஸ்ரேல் கடற்படை மற்றும் வான் பாதுகாப்புப் படைகள், ஏவுகணை அழிப்பான்கள் செங்கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறது.

அதேபோல, இன்று அதிகாலையில் இஸ்ரேலின் தெற்கே நகரமான ஈலாட் அருகே மற்றொரு ஏவுகணைத் தாக்குதலையும் இஸ்ரேல் இராணுவம் இடைமறித்து அழித்திருக்கிறது. அதேபோல, அமெரிக்க கடற்படையின் நாசக்காரக் கப்பலான யு.எஸ்.எஸ். கார்னியும், ஏமனில் இருந்து இஸ்ரேலை குறிவைக்கக்கூடிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி வருகிறது என்று பென்டகன் தெரிவித்திருக்கிறது.

Tags: IsraelWar ShipsRed sea
ShareTweetSendShare
Previous Post

ஜப்பானை வீழ்த்திய இந்திய பெண்கள் !

Next Post

ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் அணிவகுப்பு ஊர்வலம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies