ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: செங்கடலில் படைகளை குவித்த இஸ்ரேல்!
Oct 26, 2025, 08:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: செங்கடலில் படைகளை குவித்த இஸ்ரேல்!

Web Desk by Web Desk
Nov 1, 2023, 06:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏமன் நாட்டிலிருந்து ஈரானிய ஹௌதி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேல் நாட்டின் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருவதால், இஸ்ரேல் இராணுவம் செங்கடலில் படைகளை குவித்திருக்கிறது.

இஸ்ரேல் நாட்டின் மீது காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் 7-ம் தேதி அறிவிக்கப்படாத போரை நிகழ்த்தினர். இதையடுத்து, இஸ்ரேல் பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது. 26-வது நாளாக இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இப்போரால் இஸ்ரேல் நாட்டில் 1,400 பேரும், காஸா நகரில் 8,500 பேரும் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், இஸ்ரேலில் 3,500 பேரும், காஸா நகரில் 22,000 பேரும் காயமடைந்திருக்கிறார்கள். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இதனிடையே, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும் இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கும் இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த சூழலில், ஏமன் நாட்டில் இருக்கும் ஹௌதி கிளர்ச்சியாளர்களும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இஸ்ரேல் நாட்டின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இத்தாக்குதல் செங்கடல் பகுதியில் நடத்தப்பட்டிருக்கிறது.

அந்த வகையில், நேற்று செங்கடல் பகுதியில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இதை இஸ்ரேலின் ஏரோ வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து தாக்கி அழித்திருக்கிறது. இதையடுத்து, இஸ்ரேல் இராணுவம் செங்கடல் பகுதியில் படைகளை பலப்படுத்தி வருகிறது.

இதுகுறித்து இஸ்ரேல் இராணுவம் கூறுகையில், ஏமனில் இருந்து ஈரானிய ஆதரவு ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தியதைத் தொடர்ந்து இன்று செங்கடல் பகுதியில் இஸ்ரேல் தனது கடற்படை இருப்பை பலப்படுத்தி இருக்கிறது. அதன்படி, இஸ்ரேல் கடற்படை மற்றும் வான் பாதுகாப்புப் படைகள், ஏவுகணை அழிப்பான்கள் செங்கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறது.

அதேபோல, இன்று அதிகாலையில் இஸ்ரேலின் தெற்கே நகரமான ஈலாட் அருகே மற்றொரு ஏவுகணைத் தாக்குதலையும் இஸ்ரேல் இராணுவம் இடைமறித்து அழித்திருக்கிறது. அதேபோல, அமெரிக்க கடற்படையின் நாசக்காரக் கப்பலான யு.எஸ்.எஸ். கார்னியும், ஏமனில் இருந்து இஸ்ரேலை குறிவைக்கக்கூடிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி வருகிறது என்று பென்டகன் தெரிவித்திருக்கிறது.

Tags: IsraelWar ShipsRed sea
ShareTweetSendShare
Previous Post

ஜப்பானை வீழ்த்திய இந்திய பெண்கள் !

Next Post

ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் அணிவகுப்பு ஊர்வலம்!

Related News

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

Load More

அண்மைச் செய்திகள்

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

சல்மான் கானை பயங்கரவாத சந்தேக பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்!

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

பண்டிகைகளின் போது சுதேசி பொருட்களின் விற்பனை உயர்வு – பிரதமர் மோடி

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies