சிவகங்கை: ரோமானிய நாணயம் கண்டுப்பிடிப்பு!
Jan 14, 2026, 04:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிவகங்கை: ரோமானிய நாணயம் கண்டுப்பிடிப்பு!

Murugesan M by Murugesan M
Nov 2, 2023, 05:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள இலந்தக்கரையில் ரோமானிய நாணயம், சிந்து சமவெளி நாகரிக கால சட்டை ‘பொத்தானை’ தொல்லியல் ஆர்வலர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

இது தொடர்பாக தொல்லியல் ஆர்வலர் இரமேஷ் கூறியதாவது: இலந்தக்கரை தொல்லியல் மேட்டுப்பகுதியில் 2 ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட மகத பேரரசை சேர்ந்த வெள்ளி முத்திரை நாணயம், ஆயிரத்து 300 ஆண்டுக்கு முற்பட்ட சிரிய நாட்டுத் தங்க நாணயமும் கிடைத்துள்ளன. தற்போது ரோமானிய நாட்டு நாணயம் கிடைத்துள்ளது. இதன் மூலம் இப்பகுதி பன்னாட்டு தொழில் வளம் நிறைந்த பகுதியாக இருந்துள்ளது.

இங்கு உற்பத்தி செய்த பொருட்களுக்கான மூலப்பொருட்கள் வட இந்தியாவில் இருந்து வந்திருக்க வேண்டும். அவை கல் பாசிகள், பல்வேறு ஆபரணங்களாகத் தயார் செய்து மேற்கத்திய நாடுகளுக்கு கடல் மூலம் வாணிபம் செய்துள்ளதாக தெரிகிறது.

தற்போது கிடைத்த ரோமானிய நாணயம் 13 மில்லி மீட்டர் அளவில், 1.50 கிராம் எடையுடன், செம்பு உலோகத்தால் செய்யப்பட்டுள்ளது. நாணயத்தின் ஒரு புறம் ரோமப்பேரரசின் உருவமும், மறுபுறம் ஆலிவ் இலைகளுக்கு நடுவில் சில எழுத்துக்களும் காணப்படுகிறது.

சிந்து சமவெளி, மொகஞ்சாதாரோ, ஹரப்பா போன்ற இடங்களில் கிடைத்தது போல், சட்டை பொத்தானும் கிடைத்துள்ளது. இங்கு ஏற்கனவே அகழாய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் சிவகங்கை மாவட்டத்தின் மற்றொரு ‘கீழடி’ தொல்லியல் தளமாக இலந்தக்கரை காணப்படுகிறது என்றார்.

Tags: sivaganagai
ShareTweetSendShare
Previous Post

வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்ரீமதிக்கு மத்திய அமைச்சர் நேரில் வாழ்த்து!

Next Post

தோல்வி குறித்து பேசிய நியூசிலாந்து வீரர்!

Related News

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies