ஆஸ்திரேலியாவுக்கு ஏற்பட்ட சிக்கல் !
Jan 14, 2026, 09:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு ஏற்பட்ட சிக்கல் !

Murugesan M by Murugesan M
Nov 2, 2023, 05:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் இரு நட்சத்திர ஆல்ரவுண்டர்கள் களமிறங்க மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் அணிகளுக்கான ஓட்டத்தில் 3 மற்றும் 4 ஆகிய இடங்களுக்காக 4 அணிகள் தீவிரமாக போட்டியில் உள்ளன.

அதில் ஆஸ்திரேலிய அணி 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் நவம்பர் 4 ஆம் தேதி ஆஸ்திரேலியா அணி நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரானப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிப் பெறவில்லை என்றால், அந்த அணிக்கான அரையிறுதி வாய்ப்பில் சிக்கல் ஏற்படும். இதற்கான ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் சொந்த காரணங்களுக்காக திடீரென நாடு திரும்புகிறார். இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரானப் போட்டியில் மிட்செல் மார்ஷ் விளையாட மாட்டார் என்று தெரிய வந்துள்ளது.

அதேபோல் மிட்செல் மார்ஷ் எப்போது மீண்டும் இந்தியா திரும்புவார் என்பது குறித்தும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. டிராவிஸ் ஹெட் வந்த பின் 3 வது இடத்திற்கு மிட்செல் மார்ஷ் கொண்டு செல்லப்பட்டார்.

இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் எந்த அணிக்கும் எளிதாக சவால் அளிக்கும் வகையில் மிரட்டலாக அமைந்தது.

இதுமட்டுமல்லாமல் ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோல்ப் விளையாடிய போது ஏற்பட்ட விபத்து காரணமாக மேக்ஸ்வெல் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் மிட்செல் மார்ஷ் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் ஆஸ்திரேலிய அணிக்காக களமிறங்க முடியாதது அந்த அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் ஆடம் ஜாம்பாவிற்கு பின் இரண்டாவது ஸ்பின்னராக மேக்ஸ்வெல் தான் செயல்பட்டு வருகிறார். அதேபோல் பினிஷராக மேக்ஸ்வெல் விளையாடி வருகிறார். இவர்கள் இருவருக்கும் மாற்று வீரர்களாக ஆஸ்திரேலிய அணி யாரை பிளேயிங் லெவனில் சேர்க்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Tags: Australiaaustralia vs england
ShareTweetSendShare
Previous Post

தோல்வி குறித்து பேசிய நியூசிலாந்து வீரர்!

Next Post

 தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஸ்டார்ட் – அப் பிரிவு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies