காஸா நகரை சுற்றி வளைத்த இஸ்ரேல் படை: முப்படைத் தாக்குதல் தீவிரம்!
Mar 15, 2026, 09:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காஸா நகரை சுற்றி வளைத்த இஸ்ரேல் படை: முப்படைத் தாக்குதல் தீவிரம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 3, 2023, 02:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் இராணுவம் காஸா நகரைச் சுற்றி வளைத்திருப்பதாகவும், விமானப்படை, கப்பல்படை மற்றும் தரைப்படை ஆகிய முப்படைகளும் தீவிரத் தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது.

கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலுக்குள் ஊடுருவி கண்ணில் பட்டவர்களை எல்லாம் கண்மூடித்தனமாகச் சுட்டுக் கொன்றனர். மேலும், 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாவும் பிடித்துச் சென்றனர்.

ஹமாஸ் தீவிரவாதிகளின் இத்தாக்குதலில் 1,400-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தவிர, இஸ்ரேலியப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தும், முதியவர்கள் மற்றும் சிறுவர்களின் தலையைக் கொய்தும் கொடூரச் செயலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் அசுரத்தனமாக பதிலடி கொடுத்து வருகிறது. முதல்கட்டமாக வான்வழித் தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல், ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம் மற்றும் தீவிரவாத முகாம்களை தரைமட்டமாக்கியது. அதேபோல, முக்கியத் தலைவர்களையும் வான்வழித் தாக்குதல் மூலம் தீர்த்துக் கட்டியது.

இதையடுத்து, கடற்படை மூலம் ஏவுகணைத் தாக்குதலைத் தொடங்கியது. இதில், கடல் வழியாக இஸ்ரேலுக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் மற்றும் முக்கியத் தளபதி ஒருவரையும் சுட்டுக் கொலை செய்தது. இந்த சூழலில், தற்போது கண்மூடித்தனமான தரைவழித் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது.

இதன் ஒரு பகுதியாக எல்லையில் குவிக்கப்பட்டிருக்கும் டாங்கிகள் காஸா நகருக்கள் ஊடுருவி தாக்குதலை நடத்தி வருகின்றன. அதேபோல, காலாட் படை வீரர்களும் காஸா நகருக்குள் ஊடுருவி ஹமாஸ் தீவிரவாதிகளை வேட்டியாடி வருகின்றனர். இஸ்ரேல் நாட்டின் இத்தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகள் 500 பேர் உட்பட காஸா நகரைச் சேர்ந்த 9,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான், இஸ்ரேல் நாட்டின் கடற்படை மற்றும் காலாட்படை இணைந்து காஸா நகரை சுற்றி வளைத்திருப்பதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருக்கிறது. காஸா நகரின் கடற்பகுதி முழுவதையும் இஸ்ரேலின் கடற்படை முற்றுகையிட்டிருக்கிறது. அதேபோல, இஸ்ரேலின் பீரங்கிகள் மற்றும் டாங்கிகள் காஸா நகரின் எல்லையை முற்றுகையிட்டிருக்கும் நிலையில், காலாட் படை வீரர்கள் காஸா நகரை சுற்றி வளைத்திருக்கிறார்கள்.

இந்த வீரர்கள், ஹமாஸ் தீவிரவாதிகளின் பதுங்குக் குழிகள் மற்றும் சுரங்கப் பாதைகள் எங்கெங்கு இருக்கின்றன என்பதை தேடிக் கண்டுபிடித்து அழித்து வருகின்றனர். அதேபோல, தீவிரவாத முகாம்களையும், தீவிரவாதத் தலைவர்களையும் கண்டுபிடித்து அழித்து வருவதோடு, தீவிரவாதிகளை கைது செய்து வருவதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது.

Tags: WARIsraelHamas
ShareTweetSendShare
Previous Post

 ஐ.டி. ரெய்டில் சிக்கிய பிரபல தொழில் அதிபர்!

Next Post

ஏஐ தொழில்நுட்ப அபாயம் : இந்தியா உள்ளிட்ட 28 நாடுகள் கையெழுத்து!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies