தறிகெட்டுக் கிடக்கும் காவல்துறைக்குக் கடிவாளம் போட்ட சென்னை உயர் நீதிமன்றம்!
Oct 26, 2025, 07:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தறிகெட்டுக் கிடக்கும் காவல்துறைக்குக் கடிவாளம் போட்ட சென்னை உயர் நீதிமன்றம்!

Web Desk by Web Desk
Nov 3, 2023, 02:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தறிகெட்டுக் கிடக்கும் காவல்துறைக்குக் கடிவாளம் போட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். காக்கி சட்டை உங்கள் நண்பன் என்ற நிலைமாறி, காக்கிக்குள் மிருகம் ஒளிந்துள்ளது என்பதைச் காவல்துறையில் உள்ள சிலர் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்குச் சாட்டையடி கொடுத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

கடந்த 2016 -ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தோக்கவாடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜா அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் பேசிக் கொண்டு இருக்கும் போது வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, அங்கு வந்த உதவி ஆய்வாளர் முருகன், காவலர்கள் நம்மாழ்வார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் அவர்களைச் சமாதானப்படுத்துவதற்குப் பதில், சாதிப் பெயரைச் சொல்லித் திட்டி கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே, சாதிப் பெயரைச் சொல்லித் தாக்கிய உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யக்கோரிப் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

நீதிபதி இளந்திரையன் முன்பு நடைபெற்ற விசாரணையில், சாதிப் பெயரைக் கூறி, குடும்பத்தினரைத் தாக்கிய உதவி ஆய்வாளர், 3 காவலர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட 3 பேருக்கும் தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும், இழப்பீட்டுத் தொகையைச் சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர், 3 காவலர்களிடம் வசூலிக்க வேண்டும் என் நிபந்தனை விதித்ததோடு, இது தொடர்பாக 12 வாரங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

நாதியற்றவர்களுக்கு நீதிமன்றம் காவலன் என்பதை இந்த தீர்ப்பு உணர்த்தியுள்ளது.

Tags: chennai high court
ShareTweetSendShare
Previous Post

தமிழ் எனக்கு அதிகம் பிடிக்கும்: ஆளுநர் ஆர்.என். ரவி!

Next Post

தமிழகம் முழுவதும் சமூக விரோதிகள் தாக்குதல் தொடர்கிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு.

Related News

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

சல்மான் கானை பயங்கரவாத சந்தேக பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

பண்டிகைகளின் போது சுதேசி பொருட்களின் விற்பனை உயர்வு – பிரதமர் மோடி

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

சீனாவில் ரூ.1.22 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ!

டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

திருச்சியில் 6 இடங்களில் மத்திய குழு நிபுணர்கள் ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies