ஞானவாபி வழக்கு: மசூதி நிர்வாகத்தின் மனு தள்ளுபடி!
Mar 15, 2026, 06:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஞானவாபி வழக்கு: மசூதி நிர்வாகத்தின் மனு தள்ளுபடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 3, 2023, 07:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஞானவாபி மசூதி வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, மசூதி நிர்வாகம் தரப்பில் தொடரபட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் அருகே ஞானவாபி மசூதி அமைந்திருக்கிறது. இது இந்துக் கோவில் என்றும், 17-ம் நூற்றாண்டில் முகலாய அரசர் ஒளரங்கசீப்பால் இடித்துவிட்டு, மசூதி கட்டப்பட்டது என்றும் இந்துக்கள் நீண்ட காலமாகவே கூறிவருகின்றனர். இதுகுறித்து 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இதையடுத்து, ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தி இருக்கின்றனர். இது தொடர்பாக அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இந்த வழக்கை, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி விசாரித்து வந்த நிலையில், வேறு அமர்வுக்கு மாற்றி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

ஆனால், இதை எதிர்த்து மசூதி நிர்வாகம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் முடிவில் தலையிட முடியாது. உயர் நீதிமன்றங்கள், ஒரு நிலையான செயல்பாட்டைக் கொண்டிருக்கின்றன. இது நிச்சயம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் அதிகாரத்துக்குள்தான் இருக்க வேண்டும் என்று கூறி, மசூதி நிர்வாகக் குழுவின் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.

இதனிடையே, இது தொடர்பான வழக்கில் நவம்பர் 6-ம் தேதிக்குள் ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த சூழலில், ஆய்வை நிறைவு செய்து விட்டதாக வாரணாசி நீதிமன்றத்தில் தெரிவித்த தொல்லியல் துறை, அறிக்கையை சமர்ப்பிக்க நவம்பர் 17-ம் தேதி வரை அவகாசம் கேட்டிருந்தது. இதற்கு வாரணாசி மாவட்ட நீதிபதி ஏ.கே.விஸ்வேஷ் அவகாசம் அளித்து உத்தரவிட்டார்.

அதேபோல, மசூதியின் அடித்தளப் பகுதியின் நுழைவு வாயில் சாவியை வாரணாசி மாவட்ட நீதிபதியிடம் வழங்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், மசூதியின் நிர்வாகக் குழு நவம்பர் 6-க்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, அடுத்த விசாரணையை நவம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags: supreme courtGyanvapidismissesmosque committee’s plea
ShareTweetSendShare
Previous Post

திறன் மேம்பாட்டை அதிகரிக்க டிபி வேர்ல்ட் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Next Post

அணு ஆயுத சோதனை தடைக்கு ரஷ்யா ஒப்புதல் அளித்ததை ரத்து செய்யும் மசோதாவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கையெழுத்து!

Related News

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

Load More

அண்மைச் செய்திகள்

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies