ஞானவாபி வழக்கு: மசூதி நிர்வாகத்தின் மனு தள்ளுபடி!
Jan 14, 2026, 05:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஞானவாபி வழக்கு: மசூதி நிர்வாகத்தின் மனு தள்ளுபடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 3, 2023, 07:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஞானவாபி மசூதி வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, மசூதி நிர்வாகம் தரப்பில் தொடரபட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் அருகே ஞானவாபி மசூதி அமைந்திருக்கிறது. இது இந்துக் கோவில் என்றும், 17-ம் நூற்றாண்டில் முகலாய அரசர் ஒளரங்கசீப்பால் இடித்துவிட்டு, மசூதி கட்டப்பட்டது என்றும் இந்துக்கள் நீண்ட காலமாகவே கூறிவருகின்றனர். இதுகுறித்து 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இதையடுத்து, ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தி இருக்கின்றனர். இது தொடர்பாக அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இந்த வழக்கை, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி விசாரித்து வந்த நிலையில், வேறு அமர்வுக்கு மாற்றி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

ஆனால், இதை எதிர்த்து மசூதி நிர்வாகம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் முடிவில் தலையிட முடியாது. உயர் நீதிமன்றங்கள், ஒரு நிலையான செயல்பாட்டைக் கொண்டிருக்கின்றன. இது நிச்சயம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் அதிகாரத்துக்குள்தான் இருக்க வேண்டும் என்று கூறி, மசூதி நிர்வாகக் குழுவின் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.

இதனிடையே, இது தொடர்பான வழக்கில் நவம்பர் 6-ம் தேதிக்குள் ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த சூழலில், ஆய்வை நிறைவு செய்து விட்டதாக வாரணாசி நீதிமன்றத்தில் தெரிவித்த தொல்லியல் துறை, அறிக்கையை சமர்ப்பிக்க நவம்பர் 17-ம் தேதி வரை அவகாசம் கேட்டிருந்தது. இதற்கு வாரணாசி மாவட்ட நீதிபதி ஏ.கே.விஸ்வேஷ் அவகாசம் அளித்து உத்தரவிட்டார்.

அதேபோல, மசூதியின் அடித்தளப் பகுதியின் நுழைவு வாயில் சாவியை வாரணாசி மாவட்ட நீதிபதியிடம் வழங்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், மசூதியின் நிர்வாகக் குழு நவம்பர் 6-க்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, அடுத்த விசாரணையை நவம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags: supreme courtGyanvapidismissesmosque committee’s plea
ShareTweetSendShare
Previous Post

திறன் மேம்பாட்டை அதிகரிக்க டிபி வேர்ல்ட் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Next Post

அணு ஆயுத சோதனை தடைக்கு ரஷ்யா ஒப்புதல் அளித்ததை ரத்து செய்யும் மசோதாவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கையெழுத்து!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies