நேபாளத்தில் நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பலியானோரின் எண்ணிக்கை 129 ஆக உயர்ந்துள்ளது.
தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 150 கிமீ தொலைவில் உள்ள ஜாஜர்கோட் மாவட்டத்தில் உள்ள லமிடாண்டா பகுதியில் 6.4 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க அளவீட்டு மையம் தெரிவித்துள்ளது. டெல்லி-என்சிஆர், பாட்னா, கதிஹார், மோதிஹாரி மற்றும் பீகாரில் உள்ள பல மாவட்டங்களில் இந்திய-நேபாள எல்லையில் உணரப்பட்டது.
ஜஜர்கோட் துணை மேயர் உட்பட 129 பேர் இறந்துள்ளனர் மற்றும் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஏராளமானோர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ளதால் பலியானோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
நிலநடுக்கத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமாக ஆண்டவனை பிராத்திப்பதாக கூறியுள்ளார். மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.