மாநிலங்களவை தலைவரிடம் ஆம் ஆத்மி எம்.பி. மன்னிப்புக் கேட்க நீதிமன்றம் உத்தரவு!
Jul 26, 2025, 05:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாநிலங்களவை தலைவரிடம் ஆம் ஆத்மி எம்.பி. மன்னிப்புக் கேட்க நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Nov 4, 2023, 12:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. ராகவ் சத்தா, மாநிலங்களவைத் தலைவரிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சத்தா. இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது, டெல்லி அரசின் அதிகாரத்தைக் குறைக்கும் தேசிய தலைநகர் பிரதேச டெல்லி அரசு சட்டம் (திருத்தம்) 2023-ஐ பரிசீலனை செய்வதற்காக அமைக்கப்பட்ட தேர்வுக் குழுவில் 5 மாநிலங்களவை எம்.பி.க்களின் பெயர்களை அவர்களைக் கேட்காமல் சேர்த்ததாக குற்றம்சாட்டினார்.

மேலும், சிறப்பு உரிமைகள் மீறப்பட்டதாக 5 எம்.பி.க்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், இந்த விவகாரம் நாடாளுமன்ற உரிமை மீறல் குழு விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இக்குழு தனது இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை ராகவ் சதா அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். எனவே, தனது சஸ்பெண்ட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இம்மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு நடந்து வந்தது. இந்த நிலையில், இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சதன் பராசத், “ராகவ் சத்தாவுக்கு அவையின் கண்ணியத்தை பாதிக்கும் நோக்கம் எதுவும் கிடையாது. இதற்காக அவைத் தலைவரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறார்” என்றார்.

இதையடுத்து, தலைமை நீதிபதி சந்திரசூட், “மாநிலங்களவைத் தலைவர் (ஜக்தீப் தன்கர்) ஆம் ஆத்மி எம்.பி.யின் மன்னிப்பை அனுதாபத்துடன் பரிசீலனை செய்து, இந்த விவகாரத்தை முன்னெடுத்துச் செல்ல ஒரு வழியைக் காண வேண்டும். மிகவும் இளையவரான ராகவ் சத்தா முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகி இருக்கிறார்” என்று சுட்டிக்காட்டினார்.

இதைத் தொடர்ந்து, அட்டார்னி ஜெனரல் கூறுகையில், “நெறிமுறைக் குழு இன்று கூடுகிறது. சில குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்தார். இதன் பிறகு, இவ்வழக்கு நிலவரம் குறித்து தெரிவிக்கும்படி அட்டர்னி ஜெனரலிடம் கூறிய உச்ச நீதிமன்றம், வழக்கை தீபாவளிக்கு பிறகு ஒத்திவைத்தது.

Tags: courtaam aadmi partyMP Raghav chadha
ShareTweetSendShare
Previous Post

100-வது சுதந்திர தினத்தில் மற்ற நாடுகளை வழிநடத்தும் நாடாக இந்தியா மாறும்! –  ஆளுநர் ரவி பேச்சு

Next Post

சீன பொருளாதாரம் : வடிவமைக்க மனித உருவ ரோபோக்கள்

Related News

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies