மாநிலங்களவை தலைவரிடம் ஆம் ஆத்மி எம்.பி. மன்னிப்புக் கேட்க நீதிமன்றம் உத்தரவு!
Apr 29, 2026, 01:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாநிலங்களவை தலைவரிடம் ஆம் ஆத்மி எம்.பி. மன்னிப்புக் கேட்க நீதிமன்றம் உத்தரவு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 4, 2023, 12:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. ராகவ் சத்தா, மாநிலங்களவைத் தலைவரிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சத்தா. இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது, டெல்லி அரசின் அதிகாரத்தைக் குறைக்கும் தேசிய தலைநகர் பிரதேச டெல்லி அரசு சட்டம் (திருத்தம்) 2023-ஐ பரிசீலனை செய்வதற்காக அமைக்கப்பட்ட தேர்வுக் குழுவில் 5 மாநிலங்களவை எம்.பி.க்களின் பெயர்களை அவர்களைக் கேட்காமல் சேர்த்ததாக குற்றம்சாட்டினார்.

மேலும், சிறப்பு உரிமைகள் மீறப்பட்டதாக 5 எம்.பி.க்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், இந்த விவகாரம் நாடாளுமன்ற உரிமை மீறல் குழு விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இக்குழு தனது இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை ராகவ் சதா அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். எனவே, தனது சஸ்பெண்ட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இம்மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு நடந்து வந்தது. இந்த நிலையில், இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சதன் பராசத், “ராகவ் சத்தாவுக்கு அவையின் கண்ணியத்தை பாதிக்கும் நோக்கம் எதுவும் கிடையாது. இதற்காக அவைத் தலைவரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறார்” என்றார்.

இதையடுத்து, தலைமை நீதிபதி சந்திரசூட், “மாநிலங்களவைத் தலைவர் (ஜக்தீப் தன்கர்) ஆம் ஆத்மி எம்.பி.யின் மன்னிப்பை அனுதாபத்துடன் பரிசீலனை செய்து, இந்த விவகாரத்தை முன்னெடுத்துச் செல்ல ஒரு வழியைக் காண வேண்டும். மிகவும் இளையவரான ராகவ் சத்தா முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகி இருக்கிறார்” என்று சுட்டிக்காட்டினார்.

இதைத் தொடர்ந்து, அட்டார்னி ஜெனரல் கூறுகையில், “நெறிமுறைக் குழு இன்று கூடுகிறது. சில குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்தார். இதன் பிறகு, இவ்வழக்கு நிலவரம் குறித்து தெரிவிக்கும்படி அட்டர்னி ஜெனரலிடம் கூறிய உச்ச நீதிமன்றம், வழக்கை தீபாவளிக்கு பிறகு ஒத்திவைத்தது.

Tags: courtaam aadmi partyMP Raghav chadha
ShareTweetSendShare
Previous Post

100-வது சுதந்திர தினத்தில் மற்ற நாடுகளை வழிநடத்தும் நாடாக இந்தியா மாறும்! –  ஆளுநர் ரவி பேச்சு

Next Post

சீன பொருளாதாரம் : வடிவமைக்க மனித உருவ ரோபோக்கள்

Related News

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies