புலிகள் பாதுகாப்புத் தொடர்பான கலைக் கண்காட்சி: குடியரசுத் தலைவர் பங்கேற்பு
Sep 10, 2025, 06:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புலிகள் பாதுகாப்புத் தொடர்பான கலைக் கண்காட்சி: குடியரசுத் தலைவர் பங்கேற்பு

Web Desk by Web Desk
Nov 4, 2023, 01:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு டெல்லியில் “அமைதியான உரையாடல்: அழிவின் விளிம்பில் இருந்து மையத்திற்குக் கொண்டு வருதல்” என்ற தலைப்பிலான கலைப்பொருட்கள் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், சூழலியல் தொடர்பான பணிகளில் ஈடுபடும் சங்கலா அறக்கட்டளையுடன் இணைந்து இந்தக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பேசியதாவது, “உலகில் உள்ள மொத்தப் புலிகளின் எண்ணிக்கையில், 70 சதவீதம் இந்தியாவில் காணப்படுகிறது. புலிகள் காப்பகங்கள் மற்றும் தேசிய பூங்காக்களைச் சுற்றி வாழும் மக்கள், புலிகள் அதிகரிப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ளனர். புலிகள் காப்பகப் பகுதிகளைச் சுற்றியுள்ள மக்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையிலான உறவைக் கலைப் பொருட்கள் மூலம் இந்தக் கண்காட்சி வெளிப்படுத்துகிறது.

பருவநிலை மாற்றத்தின் விளைவுகளைக் கருத்தில் கொண்டு, முழுமையான மற்றும் கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக மட்டுமல்லாமல் மனிதக் குலத்தின் நன்மைக்காகவும், பழங்குடி சமூகங்களின் வாழ்க்கை விழுமியங்களை நாம் பின்பற்ற வேண்டும். இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் வளமான, மகிழ்ச்சியான வாழ்க்கை சாத்தியம் என்பது குறித்து அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று குடியரசுத்தலைவர் கூறினார்.

மேலும், கட்டுப்பாடற்ற பொருள்நிலை கொள்கை, மோசமான வணிக நடைமுறைகள் மற்றும் பேராசை ஆகியவை துன்பத்தையும் கலக்கத்தையும் கொண்ட ஒரு பூமியை நமக்கு விட்டுச் சென்றுள்ளன. உணவு மற்றும் நீர்ப் பாதுகாப்பு குறித்த கவலைகளைப் பருவநிலை மாற்றம் எழுப்பியுள்ளது. பாரம்பரிய மற்றும் நவீன சிந்தனை ஒருங்கிணைக்கப்பட வேண்டும். இதன் மூலம் நமது பாதுகாப்பு மற்றும் ஆபத்துத் தணிப்பு உத்திகளை மேலும் வலுப்படுத்த வேண்டும். உள்நாட்டு அறிவாற்றலைப் பாதுகாத்து, மேம்படுத்தி, பயன்படுத்த வேண்டும். வனப்பகுதிகளில் உள்ள மக்கள், சமூகத்தில் அவர்களின் உரிமைகள் மற்றும் அங்கீகாரத்தை இழக்காமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்” என்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கூறினார்.

Tags: tigerPresidentdraupathimurmu
ShareTweetSendShare
Previous Post

நேபாளத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது : பிரதமர் மோடி

Next Post

ஊழல்வாதிகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்: சத்தீஸ்கரில் பிரதமர் மோடி உறுதி!

Related News

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies