செஞ்சி: 7-ஆம் நூற்றாண்டு சிற்பங்கள் கண்டுபிடிப்பு!
Aug 2, 2025, 06:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செஞ்சி: 7-ஆம் நூற்றாண்டு சிற்பங்கள் கண்டுபிடிப்பு!

Web Desk by Web Desk
Nov 4, 2023, 04:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள தளவானூரில் சுமார் ஆயிரத்து 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

விழுப்புரம் மாவட்டம் தளவானூரில், திருவண்ணாமலையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் இராஜ் பன்னீர் செல்வம் மற்றும் வெடால் விஜயன் இணைந்து கள ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் தளவானூர் கிராமத்தில் பஞ்சபாண்டவர் மலையின் பின்புறம் உள்ள வயல்வெளியில் சில சிற்பங்கள் இருப்பதாக வந்த தகவலின் பெயரில் ஆய்வு மேற்கொள்ளச் சென்றனர். அங்கு வேப்பமரத்தின் அடியில் பலகை கல்லில் புடைப்பாக ஒரு சிற்பம் காணப்பட்டது. சுமார் 4 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக உள்ள அச்சிற்பம் தவ்வை என்று கண்டறியப்பட்டது. இது 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்திய தவ்வை சிற்பம் ஆகும்.

மேலும், கொற்றவை மற்றும் முருகன் சிற்பம் என்பது கண்டறியப்பட்டது. சுமார் 5 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் எட்டு கரங்களுடன் புடைப்பு சிற்பமாகக் கொற்றவை வடிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பம் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவாக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவ்வூரில் முதலாம் மகேந்திரவர்மன் காலத்திய குடவரை மற்றும் கல்வெட்டு உள்ளது. பல்லவர் காலத்திய சிற்ப அமைப்பு மற்றும் அணிகலன்களின் தாக்கம் இக்கொற்றவை சிற்பத்தில் உள்ளது கவனிக்கத்தக்கது.

இக்கொற்றவை சிற்பத்தின் அருகே, சிறிய அளவில் தாமரை மீது நின்ற கோலத்தில் தனது ஒருகையில் தாமரை மொட்டையும், மற்றொரு கையில் வேலையும் ஏந்திய நிலையில், முருகன் சிற்பம் உள்ளது.

Tags: muruganidolvillupuram
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் ரூ. 52,400 கோடி முதலீடு செய்துள்ள இத்தாலி நிறுவனங்கள்

Next Post

சோகத்தில் பாகிஸ்தான் : 402 ரன்கள் இலக்கு !

Related News

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்?

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 2 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – லக்சயா சென், தருண் மன்னேபள்ளி தோல்வி!

தேஜஸ்வி யாதவ்-ன் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு!

டெல்லி : சட்டவிரோத கட்டிடங்கள் இடித்து அகற்றம்!

தஞ்சாவூர் : 15,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

ஒரே ஓவரில் 45 ரன்கள் எடுத்து ஆப்கன் வீரர் உஸ்மான் கனி உலக சாதனை!

உத்தரகாண்ட் : மீண்டும் தொடங்கிய கேதார்நாத் யாத்திரை!

கோவை : பள்ளி மாணவர்களின் புத்தகப்பையில் குட்கா!

சிறந்த நடிகருக்கான தேசிய விருது – ஷாருக்கானுக்கு அட்லீ வாழ்த்து!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies