செஞ்சி: 7-ஆம் நூற்றாண்டு சிற்பங்கள் கண்டுபிடிப்பு!
Jun 15, 2025, 10:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செஞ்சி: 7-ஆம் நூற்றாண்டு சிற்பங்கள் கண்டுபிடிப்பு!

Web Desk by Web Desk
Nov 4, 2023, 04:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள தளவானூரில் சுமார் ஆயிரத்து 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

விழுப்புரம் மாவட்டம் தளவானூரில், திருவண்ணாமலையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் இராஜ் பன்னீர் செல்வம் மற்றும் வெடால் விஜயன் இணைந்து கள ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் தளவானூர் கிராமத்தில் பஞ்சபாண்டவர் மலையின் பின்புறம் உள்ள வயல்வெளியில் சில சிற்பங்கள் இருப்பதாக வந்த தகவலின் பெயரில் ஆய்வு மேற்கொள்ளச் சென்றனர். அங்கு வேப்பமரத்தின் அடியில் பலகை கல்லில் புடைப்பாக ஒரு சிற்பம் காணப்பட்டது. சுமார் 4 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக உள்ள அச்சிற்பம் தவ்வை என்று கண்டறியப்பட்டது. இது 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்திய தவ்வை சிற்பம் ஆகும்.

மேலும், கொற்றவை மற்றும் முருகன் சிற்பம் என்பது கண்டறியப்பட்டது. சுமார் 5 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் எட்டு கரங்களுடன் புடைப்பு சிற்பமாகக் கொற்றவை வடிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பம் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவாக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவ்வூரில் முதலாம் மகேந்திரவர்மன் காலத்திய குடவரை மற்றும் கல்வெட்டு உள்ளது. பல்லவர் காலத்திய சிற்ப அமைப்பு மற்றும் அணிகலன்களின் தாக்கம் இக்கொற்றவை சிற்பத்தில் உள்ளது கவனிக்கத்தக்கது.

இக்கொற்றவை சிற்பத்தின் அருகே, சிறிய அளவில் தாமரை மீது நின்ற கோலத்தில் தனது ஒருகையில் தாமரை மொட்டையும், மற்றொரு கையில் வேலையும் ஏந்திய நிலையில், முருகன் சிற்பம் உள்ளது.

Tags: idolvillupurammurugan
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் ரூ. 52,400 கோடி முதலீடு செய்துள்ள இத்தாலி நிறுவனங்கள்

Next Post

சோகத்தில் பாகிஸ்தான் : 402 ரன்கள் இலக்கு !

Related News

இஸ்ரேல்-ஈரான் போர் : பின்னணியில் அமெரிக்கா?

பிழையின்றி திருக்குறள் ஒப்புவிப்பு : அசாத்திய திறமை கொண்ட மழலைக்கு குவியும் பாராட்டு!

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் நகரங்கள், பதுங்கு குழியில் மக்கள் – வெடிக்குமா அணுஆயுத போர்?

வனவிலங்குகளுக்கு பாதிப்பு : நெகிழியில்லா மருதமலை நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

செவி சாய்க்குமா அரசு? – சேலம் வந்த முதல்வருக்கு கோரிக்கை!

அரசுப் பள்ளி மாணவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடத்தி வருகிறது திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

வரலாறு படைத்த தென் ஆப்பிரிக்கா : கனவை நனவாக்கிய பவுமா!

திமுக ஆட்சி ஒருதலைப்பட்சமானது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

விபத்தில் சிக்கிய விமானத்தின் பராமரிப்புகளை கையாளவில்லை : துருக்கி மறுப்பு!

2026 மார்ச் 31-க்குள் நக்சலிசம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவோம் : அமித்ஷா திட்டவட்டம்!

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு : கொட்டும் மழையில் பக்தர்கள் தரிசனம்!

காசிமேடு துறைமுகத்தில் குவிந்த அசைவ பிரியர்கள்!

உத்தரப்பிரசேதம் : மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!

தைலாபுரத்தில் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

முருகன் பக்தர்கள் மாநாடு : 90 சதவீத பணிகள் நிறைவு – நாளை முதல் பக்தர்கள் பூஜை செய்ய ஏற்பாடு!

அமெரிக்க ராணுவத்தின் 250-வது ஆண்டு விழா கொண்டாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies