ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 286 ரன்களை எடுத்துள்ளது.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய நாள் இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது.
இதில் முதல் பெங்களுருவில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது. இரண்டாம் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடுகின்றனர். இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர்.
இதில் இரண்டாவது ஓவரிலேயே டிராவிஸ் ஹெட் 11 ரங்களுக்கு ஆட்டமிழந்தார். பின்பு டேவிட் வார்னர் 6 வது ஓவரில் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இவர்களைத் தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லாபுசாக்னே களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் 22 வது ஓவரில் ஸ்டீவ் ஸ்மித் 3 பௌண்டரீஸ் அடித்து மொத்தமாக 52 பந்துகளில் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் சிறப்பாக விளையாடி வந்த மார்னஸ் அடுத்த 2 ஓவர்களில் 7 பௌண்டரிஸுடன் 83 பந்தில் 71 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக களமிறங்கிய கேமரூன் கிரீன் சிறப்பாக விளையாடி 5 பௌண்டரிஸுடன் 52 பந்துகளில் 47 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 223 ஆகா இருந்தது.
பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரங்களில் ஆட்டமிழக்க ஆடம் சம்பா 29 ரன்களும் மார்கஸ் ஸ்டோனிஸ் 35 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 286 ரன்களை எடுத்துள்ளது.
இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்களும், மார்க் வூட் மற்றும் அடில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்களும், லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் டேவிட் வில்லி தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனால் இங்கிலாந்து அணி வெற்றி பெற 287 ரன்கள் இலக்காக உள்ளது.