பாகிஸ்தான் விமானப்படை பயிற்சி தளத்தின் மீது தாக்குதல் நடத்திய 9 தீவிரவாதிகளையும் நரகத்திற்கு அனுப்விட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாகாணத்தின் விமானப்படைக்கு சொந்தமான மியான்வாலி பயிற்சி தளம் அமைந்துள்ளது. உச்ச கட்ட பாதுகாப்பு நிறைந்த இந்த தளத்திற்குள் இன்று காலை தீவிரவாதிகள் திடீரென நுழைந்தனர். அங்கு இருந்து விமானங்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்த தொடங்கினர்.
இதனையடுத்து சுதாரித்த கொண்ட ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் அப்போதே 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் 3 விமானங்கள் சேதம் அடைந்ததாக செய்திகள் வெளியானது.
இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-ஜிகாத் பாகிஸ்தான் (TJP) என்ற அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. இந்நிலையில், விமானப்படை தளத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாதிகளையும் நரகத்திற்கு அனுப்பிவிட்டோம் என ராணுவம் தெரிவித்துள்ளது. பயன்பாட்டில் இருக்கும் விமானங்கள் சேதம் அடையவில்லை என்றும், பயனற்ற நிலையில் இருந்த விமானங்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலுசிஸ்தான் மற்றும் கைபர் பாக்துன்க்வா மாகாணங்களில் அடுத்தடுத்து நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் 17 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்கள் நடந்த சில மணி நேரங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிட்டுள்ளது.