நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அதிகாலை நிகழ்ந்த விபத்தில் வன அதிகாரி உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார்கள்.
கேரளாவைச் சேர்ந்த மர வியாபாரி மார்த்தாண்டம் ராஜன், கொல்லிமலை ஆரியூர் பகுதியைச் சேர்ந்த மரம் வியாபாரி செல்வகுமார் கொல்லிமலை வனவர் ரகுநாதன் ஆகியோர் சனிக்கிழமை இரவு கொல்லிமலையிலிருந்து பொலிரோ வாகனத்தில் ராசிபுரம் நோக்கிச் சென்றுள்ளனர்.
அவர்கள் வாகனம் சாலையில் சீராகச் சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பேளுக்குறிச்சி மோளப்பாளையம் பேருந்து ஸ்டாப் நிழற்கூடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது
இந்த விபத்தில் கேரளாவைச் சேர்ந்த மர வியாபாரி மார்த்தாண்டம் ராஜன் (43), கொல்லிமலை ஆரியூர் பகுதியைச் சேர்ந்த மரம் வியாபாரி செல்வகுமார் (42) கொல்லிமலை வனவர் ரகுநாதன் (40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேளுக்குறிச்சி காவல்துறையினர் 3 பேரின் உடலை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.