நிஜ்ஜர் கொலைக்கான ஆதாரத்தைக் காட்டுங்க: கனடாவிடம் கேட்கும் இந்தியா!
Mar 15, 2026, 03:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிஜ்ஜர் கொலைக்கான ஆதாரத்தைக் காட்டுங்க: கனடாவிடம் கேட்கும் இந்தியா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 5, 2023, 03:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையில், இந்திய ஏஜென்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றச்சாட்டிய நிலையில், ஆதாரத்தை காட்டுமாறு அந்நாட்டு அரசிடம் இந்தியா கூறியிருக்கிறது.

கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள சீக்கிய குருத்துவாரா அருகே, காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கடந்த ஜூன் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார்.

இதை இந்திய மறுத்த நிலையில், அந்நாட்டுக்கான இந்திய தூதரை கனடா அரசாங்கம் வெளியேற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவுக்கான அந்நாட்டுத் தூதரக உயர் அதிகாரியை மத்திய அரசு வெளியேற்றியது. மேலும், கனடா நாட்டினருக்கு விசா வழங்குவதையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

இந்த நிலையில்தான், ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலை வழக்கில் இந்தியா மீது கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதாரத்தைக் காட்டுமாறு கனடா அரசிடம் இந்தியா வலியுறுத்தி இருக்கிறது. இதுகுறித்து கனேடிய தளமான தி குளோப் அண்ட் மெயிலுக்கு கனடாவிற்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா அளித்த பேட்டியில்,

“தீவிரவாதி கொலை வழக்கு விசாரணையில் உதவுவதற்கு ஏதுவாக இந்தியாவிடம் இதுவரை எந்த ஆதாரமும் வழங்கப்படவில்லை. ஆதாரம் எங்கே உள்ளது? விசாரணை முடிவு எங்கே? இந்த விவகாரத்தில் ஒரு படி மேலே சென்று விசாரணை கறைபடிந்து விட்டது என்ற குற்றச்சாட்டை நான் முன் வைக்கிறேன்.

இக்கொலை விவகாரத்தில் இந்தியா அல்லது இந்திய ஏஜென்ட்கள் உள்ளனர் என்ற குற்றச்சாட்டை முன்வைக்குமாறு மேல் மட்டத்தில் இருந்து யாரோ அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். தூதர்களுக்கு இடையிலான எந்தவொரு உரையாடலும் பாதுகாக்கப்படுகிறது. ஆகவே, அவற்றை நீதிமன்றத்தில் ஆதாரமாகப் பயன்படுத்த முடியாது.

சட்டவிரோதமான ஒயர்டேப்கள் பற்றிப் பேசுகிறீர்கள். ஆதாரங்களைப் பற்றிப் பேசுகிறீர்கள். இரண்டு இராஜதந்திரிகளுக்கு இடையிலான உரையாடல்கள் அனைத்து சர்வதேச சட்டங்களாலும் பாதுகாக்கப்பட்டவை. இந்த உரையாடல்களை நீங்கள் எவ்வாறு கைப்பற்றினீர்கள் என்பதை எனக்குக் கூறுங்கள்” என்று கூறியிருக்கிறார்.

Tags: Canadademandevidenceindian envoy
ShareTweetSendShare
Previous Post

இண்டேன் கேஸ் முன்பதிவில் தமிழ் மொழி நீக்கமா? – உண்மை என்ன?

Next Post

மணல் சிற்பத்தால் விராட் கோலிக்கு வாழ்த்து !

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies