நிஜ்ஜர் கொலைக்கான ஆதாரத்தைக் காட்டுங்க: கனடாவிடம் கேட்கும் இந்தியா!
Sep 12, 2026, 11:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிஜ்ஜர் கொலைக்கான ஆதாரத்தைக் காட்டுங்க: கனடாவிடம் கேட்கும் இந்தியா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 5, 2023, 03:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையில், இந்திய ஏஜென்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றச்சாட்டிய நிலையில், ஆதாரத்தை காட்டுமாறு அந்நாட்டு அரசிடம் இந்தியா கூறியிருக்கிறது.

கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள சீக்கிய குருத்துவாரா அருகே, காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கடந்த ஜூன் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார்.

இதை இந்திய மறுத்த நிலையில், அந்நாட்டுக்கான இந்திய தூதரை கனடா அரசாங்கம் வெளியேற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவுக்கான அந்நாட்டுத் தூதரக உயர் அதிகாரியை மத்திய அரசு வெளியேற்றியது. மேலும், கனடா நாட்டினருக்கு விசா வழங்குவதையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

இந்த நிலையில்தான், ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலை வழக்கில் இந்தியா மீது கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதாரத்தைக் காட்டுமாறு கனடா அரசிடம் இந்தியா வலியுறுத்தி இருக்கிறது. இதுகுறித்து கனேடிய தளமான தி குளோப் அண்ட் மெயிலுக்கு கனடாவிற்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா அளித்த பேட்டியில்,

“தீவிரவாதி கொலை வழக்கு விசாரணையில் உதவுவதற்கு ஏதுவாக இந்தியாவிடம் இதுவரை எந்த ஆதாரமும் வழங்கப்படவில்லை. ஆதாரம் எங்கே உள்ளது? விசாரணை முடிவு எங்கே? இந்த விவகாரத்தில் ஒரு படி மேலே சென்று விசாரணை கறைபடிந்து விட்டது என்ற குற்றச்சாட்டை நான் முன் வைக்கிறேன்.

இக்கொலை விவகாரத்தில் இந்தியா அல்லது இந்திய ஏஜென்ட்கள் உள்ளனர் என்ற குற்றச்சாட்டை முன்வைக்குமாறு மேல் மட்டத்தில் இருந்து யாரோ அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். தூதர்களுக்கு இடையிலான எந்தவொரு உரையாடலும் பாதுகாக்கப்படுகிறது. ஆகவே, அவற்றை நீதிமன்றத்தில் ஆதாரமாகப் பயன்படுத்த முடியாது.

சட்டவிரோதமான ஒயர்டேப்கள் பற்றிப் பேசுகிறீர்கள். ஆதாரங்களைப் பற்றிப் பேசுகிறீர்கள். இரண்டு இராஜதந்திரிகளுக்கு இடையிலான உரையாடல்கள் அனைத்து சர்வதேச சட்டங்களாலும் பாதுகாக்கப்பட்டவை. இந்த உரையாடல்களை நீங்கள் எவ்வாறு கைப்பற்றினீர்கள் என்பதை எனக்குக் கூறுங்கள்” என்று கூறியிருக்கிறார்.

Tags: Canadademandevidenceindian envoy
Share
Tweet
SendShare
Previous Post

இண்டேன் கேஸ் முன்பதிவில் தமிழ் மொழி நீக்கமா? – உண்மை என்ன?

Next Post

மணல் சிற்பத்தால் விராட் கோலிக்கு வாழ்த்து !

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies