திமுக 1957ல் கொடுத்த வாக்குறுதியே இன்னும் நிறைவேற்றவில்லை! - அண்ணாமலை
Aug 18, 2025, 09:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக 1957ல் கொடுத்த வாக்குறுதியே இன்னும் நிறைவேற்றவில்லை! – அண்ணாமலை

Web Desk by Web Desk
Nov 5, 2023, 04:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக விவசாயிகளுக்கு எதுவுமே செய்யவில்லை என்பதற்கு இந்த குளித்தலை தொகுதியே சாட்சி. எனப் பாஜக தலைவர் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை குளித்தலையில் நேற்று நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,

இந்த பகுதியில் உள்ள திருஈங்கோய்மலை லலிதா தேவி ஆலயத்தில், பூஜை செய்யும் அனைவரும் பெண்களே. சனாதன தர்மத்தில் ஆணும் பெண்ணும் சமம் என்பதற்கு சான்றாக விளங்குகிறது இந்த லலிதா பரமேஸ்வரி ஆலயம். விவசாய பூமியான குளித்தலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், சுமார் 12000 ஹெக்டேரில் நெல், கரும்பு, வெற்றிலை மற்றும் வாழை விவசாயம் நடைபெறுகிறது.

கருணாநிதி முதன்முதலாக குளித்தலை சட்டமன்ற தொகுதியில் 1957ல் போட்டியிட்டபோது, குடகனாறு தண்ணீரை கரூருக்கு கொண்டு வர முயற்சிகள் எடுப்பேன் என உறுதி அளித்தார். இன்றுவரை இந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை. 1957ல் கொடுத்த வாக்குறுதியே இன்னும் நிறைவேற்றவில்லை. ஆனால், கொடுத்த 512… pic.twitter.com/USm8lRMkRm

— K.Annamalai (@annamalai_k) November 5, 2023

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களை முதன்முதலில் சட்டமன்றம் அனுப்பிவைத்த தொகுதி குளித்தலை. முதல் தேர்தல் பரப்புரையின் போது “காகிதப்பூ மணக்காது, காங்கிரஸ் ஆட்சி இனிக்காது” என்று மேடைகளில் அடுக்கு மொழி வசனங்கள் பேசினார் கருணாநிதி. அடுத்த 23 ஆண்டுகளுக்கு பிறகு “நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக” காங்கிரஸை வரவேற்றார். சொல் ஒன்று செயல் ஒன்று. இதுதான் திமுக.

கருணாநிதி முதன்முதலாக குளித்தலை சட்டமன்ற தொகுதியில் 1957ல் போட்டியிட்டபோது, குடகனாறு தண்ணீரை கரூருக்கு கொண்டு வர முயற்சிகள் எடுப்பேன் என உறுதி அளித்தார். இன்றுவரை இந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை. 1957ல் கொடுத்த வாக்குறுதியே இன்னும் நிறைவேற்றவில்லை.

ஆனால், கொடுத்த 512 வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டதாக பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின். இதே குளித்தலை சட்டமன்ற தொகுதியில், அன்று எதிர்க்கட்சியில் இருந்த மு.க ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கைது செய்வோம் என்றார்.

இன்று அந்தக் கைதை எதிர்க்கிறார். முதலமைச்சர் செய்யச் சொன்னதுதான் இன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதன் விளைவு, கரூர் சட்டமன்ற உறுப்பினர் இன்று புழல் சிறையில் இருக்கிறார்.

இங்குள்ள 1,170 ஏக்கர் பரப்பளவு கொண்ட பஞ்சப்பட்டி ஏரிக்கு, மாயனூர் காவிரி நீரை கொண்டு வர வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. 2 டிஎம்சி வரை நீரை தேக்க முடியும் அளவுக்கு தமிழகத்தின் மூன்றாவது பெரிய ஏரியான இந்த ஏரி, கடந்த 15 ஆண்டுகளாக நீரின்றி வறண்டு கிடக்கிறது.

மாயனூர் நீரை கொண்டு வந்தால் 15,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். திமுகவின் தேர்தல் வாக்குறுதியில், பஞ்சப்பட்டி ஏரிக்கு காவிரி நீரை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறியிருந்ததை நிறைவேற்றவில்லை. திமுக விவசாயிகளுக்கு எதுவுமே செய்யவில்லை என்பதற்கு இந்த குளித்தலை தொகுதியே சாட்சி.

கரூர் மாவட்டத்திற்கு மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. பல லட்சம் பொதுமக்கள் பலன் பெற்றுள்ளனர்.

ஆனால் திமுக, கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. வரும் பாராளுமன்றத் தேர்தலில், மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் நலத்திட்டங்கள் தொடர, ஊழல் சந்தர்ப்பவாத திமுக கூட்டணியைப் புறக்கணித்து, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்போம் எனத் தெரிவித்தார்.

Tags: k annamalaiannamalai en mann en makkal rally
ShareTweetSendShare
Previous Post

காங்கிரஸின் பொய் வாக்குறுதிகள்: அனுராக் தாக்கூர் கடும் தாக்கு!

Next Post

தமிழகத்தில், ஆளுநரும், முதல்வரும் அமர்ந்து பேசவேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன் கருத்து!

Related News

திருத்தணி முருகன் கோயில் தெப்ப திருவிழா – திரளான பக்தரகள் பங்கேற்பு!

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த இருவர் கைது!

பொள்ளாச்சி நந்த கோபால்சாமி மலை கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா!

அம்பத்தூரில் காவல்துறையின் உதவியோடு நிலம் அபகரிப்பு – தம்பதி குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணி 4-ம் நாள் திருவிழா கோலாகலம்!

தமிழரை பெருமைப்படுத்த சி.பி.ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்க வேண்டும் – திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சீனிவாசன் பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் செண்டர் மீடியனில் மோதி விபத்து!

 தேங்காய் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

செஞ்சி நாதக கூட்டத்தில் செய்தியாளர்களை பவுன்சர்கள் தாக்க முயற்சி – பேச்சை நிறுத்திவிட்டு இறங்கிய சென்ற சீமான்!

சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் – 3 மணி நேரம் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள்!

திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை!

விடுமுறை முடிந்து ஒரே நேரத்தில் சென்னை திரும்பிய பயணிகள் – உளுந்தூர் பேட்டை சுங்கச் சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை – ஜெலன்ஸ்கியை இன்று சந்திக்கிறார் ட்ரம்ப்!

தமிழக ரயில் திட்டங்களுக்கு நடப்பாண்டில் ரூ.6626 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

10.5 சதவீத இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies