பிரதமர் மோடிதான் எங்கள் முகம்: மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்!
Mar 25, 2026, 11:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடிதான் எங்கள் முகம்: மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 6, 2023, 01:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதப் பிரதமர் மோடியும், தாமரை சின்னமும்தான் எங்களது முகம். மற்றபடி முதல்வராகத் தேர்வு செய்யப்படுபவர் யாராக இருந்தாலும் அவரது பதவிகாலம் முழுமையடைவதை உறுதி செய்வோம் என்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியிருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த சட்டமன்றத்தின் பதவிக்காலம் டிசம்பர் மாதத்தோடு நிறைவடைகிறது. எனவே, இம்மாநிலத்திற்கு இம்மாதம் 25-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் நேரடிப் போட்டி நிலவுகிறது.

இதனால் இரு கட்சியினரும் ஆட்சியைக் கைப்பற்ற தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 200 தொகுதிளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. எனினும், அசோக் கெலாட்டையே மீண்டும் முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி அறிவித்திருக்கிறது.

அதேசமயம், பா.ஜ.க.வைப் பொறுத்தவரை மாநிலத் தேர்தல்களில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்பதில்லை. எனவே, ராஜஸ்தானில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பா.ஜ.க. அறிவிக்கவில்லை. எனினும், முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா இம்முறை முதல்வர் வேட்பாளராக இருக்க மாட்டார் என்று பரவலான பேச்சு நிலவி வருகிறது.

இந்த நிலையில், முதல்வர் வேட்பாளர் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், “பா.ஜ.க.வைப் பொறுத்தவரை பிரதமர் மோடி மற்றும் தாமரைதான் எங்களின் முகம். மேலும், எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் நாடாளுமன்றக் குழுவில் இடம் பிடித்திருப்பவர்கள் முதல்வர் யார் என்பதை முடிவு செய்வார்கள். முதல்வராகத் தேர்வு செய்யப்படும் நபர் யாராக இருந்தாலும், அவருடைய பதவிக்காலம் முழுமை அடைவதை உறுதி செய்வோம்.

மேலும், ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க. முழுப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்த முறை தேர்தல் நடக்கும். காங்கிரஸ் கட்சியின் ஊழல்களுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள். ஊழலுக்கு எதிரான போரில் பாடுபடும் அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை உள்ளிட்ட ஏஜென்ஸிகளை பாராட்ட வேண்டும். ஊழல் செய்பவர்கள் பிடிபட்ட பிறகு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்” என்றார்.

Tags: Central MinisterRajasthanGajendra singh shekhswat
ShareTweetSendShare
Previous Post

ரூ.508 கோடி முறைகேடு புகாரில் சத்தீஸ்கர் முதல்வர்!

Next Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : தங்கப் பதக்கம் யாருக்கு ?

Related News

சீரமைப்பு பெயரில் சிதைக்கப்பட்ட அடையாள சின்னம் : குற்றால அருவியில் தரத்துடன் அமையுமா புதிய பாதுகாப்பு வளைவு? சிறப்பு தொகுப்பு!

டிரம்பை கேலி செய்த மீம்ஸ், டிஜிட்டல் பிரசாரங்கள்! புதிய பரிமாணத்தை எட்டும் அமெரிக்கா – ஈரான் போர் – சிறப்பு தொகுப்பு!

மேம்படும் இந்தியா-சீனா எல்லை வர்த்தகம் : மீண்டும் திறக்கப்படும் லிபுலேக் கணவாய் – சிறப்பு தொகுப்பு!

என்டிஏ கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

முஸ்லிம் சமூகத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை – அசாதுதீன் ஓவைசி

ஈரான் பாதுகாப்பு செயலராக முன்னாள் தளபதி முகமது பாகெர் ஜோல்காதிர் நியமனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கள்ளக்குறிச்சி அருகே கோவில் திருவிழாவிற்கு அனுமதி மறுப்பு- தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் அறிவிப்பு!

மத்திய கிழக்கு பகுதிக்கு மேலும் 1,000 வீரர்கள் – அமெரிக்கா முடிவு!

நாங்குநேரி விவசாயி படுகொலை- 9வது நாளாக உறவினர்கள் போராட்டம்!

சொகுசு கார் மோதி சிறுமி உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல் !

ராணிப்பேட்டை:ஏரியில் குளித்த பள்ளி மாணவர்கள் 3 பேர் பலி!

இறந்தவரின் உடலை பெற வேண்டாம் என்று தடுத்தது யார்? – ஆகாஷ் வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி!

புதுக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு வந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்ட பாலக் கஃபே!

அழுகிய பழங்களைப் பயன்படுத்தி பழச்சாறு – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஒரே எக்ஸ் பதிவு – வெளியான ஈரானின் இரட்டை நிலைபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies