இந்தியாவிலேயே முதல் முறை... தீவிரவாதிகளின் கால்களில் ஜி.பி.எஸ். கருவி!
Oct 26, 2025, 01:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவிலேயே முதல் முறை… தீவிரவாதிகளின் கால்களில் ஜி.பி.எஸ். கருவி!

ஜம்மு காஷ்மீர் காவல்துறை அதிரடி!

Web Desk by Web Desk
Nov 6, 2023, 01:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் ஜாமீனில் வெளியே வரும் தீவிரவாதிகள் தலைமறைவாவதைத் தடுக்கும் வகையில், அவர்களின் கால்களில் ஜி.பி.எஸ். கருவி பொறுத்தும் அதிரடி நடவடிக்கையை அம்மாநிலக் காவல்துறையினர் கையில் எடுத்திருக்கின்றனர். இந்தியாவிலேயே முதல் முறையாக தீவிரவாதிகளின் கால்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தும் நடைமுறையை கையாண்டிருப்பது ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் தலைவிரித்தாடி வந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு அம்மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதன் பிறகு, தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதற்காக, மாநில காவல்துறையுடன் இராணுவமும் இணைந்து கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், ஏராளமான தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதேசமயம், கூட்டு நடவடிக்கைக் குழுவினர் மீது தாக்குதல் நடத்தி அத்துமீறும் தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். இது ஒருபுறம் இருக்க, ஜாமீனில் வெளிவரும் தீவிரவாதிகள், காவல்நிலையத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகி விடுகின்றனர்.

ஆகவே, தீவிரவாதிகள் தலைமறைவாவதைத் தடுக்கும் வகையில், அவர்களின் கால்களில் ஜி.பி.எஸ். கருவிகளை பொறுத்தும் அதிரடி நடவடிக்கையை ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறையினர் கையில் எடுத்திருக்கின்றனர். இந்தியாவிலேயே இப்படியொரு நடவடிக்கையை எடுக்கும் முதல் காவல்துறை ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற நடைமுறை ஏற்கெனவே அமெரிக்கா, பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் மட்டுமே இருக்கிறது. இந்நாடுகளில் ஜாமீன், பரோல் அல்லது வீட்டுக்காவலில் உள்ளவர்களை கண்காணிக்க அவர்களது உடலில் ஜி.பி.எஸ். டிராக்கர் கருவிகள் பொருத்தப்படுகின்றன.

இதன் மூலம், ஜாமீனில் வருபவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுக்க முடிவதுடன், அவர்களை கண்காணிக்கவும் முடியும். இதனால், அவர்கள் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் கூறுகையில், “என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவின்படி, கடுமையான சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்படும் தீவிரவாதிகளுக்கு ஜி.பி.எஸ். டிராக்கர் கருவி பொருத்தப்படுகிறது” என்றார்.

தடை செய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி குலாம் முகமது பட், ஜாமீன் கோரி ஜம்முவிலுள்ள சிறப்பு என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது, என்.ஐ.ஏ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தீவிரவாதி செய்த குற்றத்தின் தீவிரவாதியை எடுத்துரைத்தவர், அவரை கண்காணிக்க வேண்டியதின் அவசியத்தையும் எடுத்துக் கூறினார்.

இதையடுத்து, அத்தீவிரவாதிக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கினாலும்கூட, அவரைத் தொடர்ந்து கண்காணிக்க ஜி.பி.எஸ். டிராக்கர் கருவியை பொருத்த உத்தரவிட்டது. அதன்படி, குலாம் முகமது பட்டின் கணுக்காலில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டது.

Tags: jammu kashmirterroristGPS Tracker
ShareTweetSendShare
Previous Post

தமிழக காவல்துறை ஊழல் திமுகவின் கட்டளைப்படி செயல்படுவதை நிறுத்திவிடவேண்டும்! – அண்ணாமலை

Next Post

சாம்பியன்ஸ் டிராபி வாய்ப்பை தக்கவைக்குமா இலங்கை?

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies