இந்தியாவிலேயே முதல் முறை... தீவிரவாதிகளின் கால்களில் ஜி.பி.எஸ். கருவி!
Sep 13, 2026, 02:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவிலேயே முதல் முறை… தீவிரவாதிகளின் கால்களில் ஜி.பி.எஸ். கருவி!

ஜம்மு காஷ்மீர் காவல்துறை அதிரடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 6, 2023, 01:52 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் ஜாமீனில் வெளியே வரும் தீவிரவாதிகள் தலைமறைவாவதைத் தடுக்கும் வகையில், அவர்களின் கால்களில் ஜி.பி.எஸ். கருவி பொறுத்தும் அதிரடி நடவடிக்கையை அம்மாநிலக் காவல்துறையினர் கையில் எடுத்திருக்கின்றனர். இந்தியாவிலேயே முதல் முறையாக தீவிரவாதிகளின் கால்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தும் நடைமுறையை கையாண்டிருப்பது ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் தலைவிரித்தாடி வந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு அம்மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதன் பிறகு, தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதற்காக, மாநில காவல்துறையுடன் இராணுவமும் இணைந்து கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், ஏராளமான தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதேசமயம், கூட்டு நடவடிக்கைக் குழுவினர் மீது தாக்குதல் நடத்தி அத்துமீறும் தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். இது ஒருபுறம் இருக்க, ஜாமீனில் வெளிவரும் தீவிரவாதிகள், காவல்நிலையத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகி விடுகின்றனர்.

ஆகவே, தீவிரவாதிகள் தலைமறைவாவதைத் தடுக்கும் வகையில், அவர்களின் கால்களில் ஜி.பி.எஸ். கருவிகளை பொறுத்தும் அதிரடி நடவடிக்கையை ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறையினர் கையில் எடுத்திருக்கின்றனர். இந்தியாவிலேயே இப்படியொரு நடவடிக்கையை எடுக்கும் முதல் காவல்துறை ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற நடைமுறை ஏற்கெனவே அமெரிக்கா, பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் மட்டுமே இருக்கிறது. இந்நாடுகளில் ஜாமீன், பரோல் அல்லது வீட்டுக்காவலில் உள்ளவர்களை கண்காணிக்க அவர்களது உடலில் ஜி.பி.எஸ். டிராக்கர் கருவிகள் பொருத்தப்படுகின்றன.

இதன் மூலம், ஜாமீனில் வருபவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுக்க முடிவதுடன், அவர்களை கண்காணிக்கவும் முடியும். இதனால், அவர்கள் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் கூறுகையில், “என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவின்படி, கடுமையான சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்படும் தீவிரவாதிகளுக்கு ஜி.பி.எஸ். டிராக்கர் கருவி பொருத்தப்படுகிறது” என்றார்.

தடை செய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி குலாம் முகமது பட், ஜாமீன் கோரி ஜம்முவிலுள்ள சிறப்பு என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது, என்.ஐ.ஏ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தீவிரவாதி செய்த குற்றத்தின் தீவிரவாதியை எடுத்துரைத்தவர், அவரை கண்காணிக்க வேண்டியதின் அவசியத்தையும் எடுத்துக் கூறினார்.

இதையடுத்து, அத்தீவிரவாதிக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கினாலும்கூட, அவரைத் தொடர்ந்து கண்காணிக்க ஜி.பி.எஸ். டிராக்கர் கருவியை பொருத்த உத்தரவிட்டது. அதன்படி, குலாம் முகமது பட்டின் கணுக்காலில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டது.

Tags: jammu kashmirterroristGPS Tracker
Share
Tweet
SendShare
Previous Post

தமிழக காவல்துறை ஊழல் திமுகவின் கட்டளைப்படி செயல்படுவதை நிறுத்திவிடவேண்டும்! – அண்ணாமலை

Next Post

சாம்பியன்ஸ் டிராபி வாய்ப்பை தக்கவைக்குமா இலங்கை?

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies