இந்தியாவிலேயே முதல் முறை... தீவிரவாதிகளின் கால்களில் ஜி.பி.எஸ். கருவி!
Apr 29, 2026, 09:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவிலேயே முதல் முறை… தீவிரவாதிகளின் கால்களில் ஜி.பி.எஸ். கருவி!

ஜம்மு காஷ்மீர் காவல்துறை அதிரடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 6, 2023, 01:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் ஜாமீனில் வெளியே வரும் தீவிரவாதிகள் தலைமறைவாவதைத் தடுக்கும் வகையில், அவர்களின் கால்களில் ஜி.பி.எஸ். கருவி பொறுத்தும் அதிரடி நடவடிக்கையை அம்மாநிலக் காவல்துறையினர் கையில் எடுத்திருக்கின்றனர். இந்தியாவிலேயே முதல் முறையாக தீவிரவாதிகளின் கால்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தும் நடைமுறையை கையாண்டிருப்பது ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் தலைவிரித்தாடி வந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு அம்மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதன் பிறகு, தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதற்காக, மாநில காவல்துறையுடன் இராணுவமும் இணைந்து கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், ஏராளமான தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதேசமயம், கூட்டு நடவடிக்கைக் குழுவினர் மீது தாக்குதல் நடத்தி அத்துமீறும் தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். இது ஒருபுறம் இருக்க, ஜாமீனில் வெளிவரும் தீவிரவாதிகள், காவல்நிலையத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகி விடுகின்றனர்.

ஆகவே, தீவிரவாதிகள் தலைமறைவாவதைத் தடுக்கும் வகையில், அவர்களின் கால்களில் ஜி.பி.எஸ். கருவிகளை பொறுத்தும் அதிரடி நடவடிக்கையை ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறையினர் கையில் எடுத்திருக்கின்றனர். இந்தியாவிலேயே இப்படியொரு நடவடிக்கையை எடுக்கும் முதல் காவல்துறை ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற நடைமுறை ஏற்கெனவே அமெரிக்கா, பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் மட்டுமே இருக்கிறது. இந்நாடுகளில் ஜாமீன், பரோல் அல்லது வீட்டுக்காவலில் உள்ளவர்களை கண்காணிக்க அவர்களது உடலில் ஜி.பி.எஸ். டிராக்கர் கருவிகள் பொருத்தப்படுகின்றன.

இதன் மூலம், ஜாமீனில் வருபவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுக்க முடிவதுடன், அவர்களை கண்காணிக்கவும் முடியும். இதனால், அவர்கள் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் கூறுகையில், “என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவின்படி, கடுமையான சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்படும் தீவிரவாதிகளுக்கு ஜி.பி.எஸ். டிராக்கர் கருவி பொருத்தப்படுகிறது” என்றார்.

தடை செய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி குலாம் முகமது பட், ஜாமீன் கோரி ஜம்முவிலுள்ள சிறப்பு என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது, என்.ஐ.ஏ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தீவிரவாதி செய்த குற்றத்தின் தீவிரவாதியை எடுத்துரைத்தவர், அவரை கண்காணிக்க வேண்டியதின் அவசியத்தையும் எடுத்துக் கூறினார்.

இதையடுத்து, அத்தீவிரவாதிக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கினாலும்கூட, அவரைத் தொடர்ந்து கண்காணிக்க ஜி.பி.எஸ். டிராக்கர் கருவியை பொருத்த உத்தரவிட்டது. அதன்படி, குலாம் முகமது பட்டின் கணுக்காலில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டது.

Tags: jammu kashmirterroristGPS Tracker
ShareTweetSendShare
Previous Post

தமிழக காவல்துறை ஊழல் திமுகவின் கட்டளைப்படி செயல்படுவதை நிறுத்திவிடவேண்டும்! – அண்ணாமலை

Next Post

சாம்பியன்ஸ் டிராபி வாய்ப்பை தக்கவைக்குமா இலங்கை?

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies