சத்தீஸ்கரில் ஐ.இ.டி. வெடிப்பு: 4 பேர் காயம்... பலத்த பாதுகாப்பு!
Jul 4, 2025, 09:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சத்தீஸ்கரில் ஐ.இ.டி. வெடிப்பு: 4 பேர் காயம்… பலத்த பாதுகாப்பு!

Web Desk by Web Desk
Nov 6, 2023, 07:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடக்கவிருக்கும் நிலையில், நக்சல்கள் வைத்த ஐ.இ.டி. குண்டு வெடித்து எல்லைப் பாதுகாப்புப் படை வீரர், 2 வாக்குச்சாவடி ஊழியர்கள் மற்றும் இந்தோ திபெத் எல்லைக் காவல்படை வீரர் ஆகிய 4 பேர் காயமடைந்திருக்கின்றனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டமன்றத்தின் பதவிகாலம் விரைவில் நிறைவடைகிறது. இதையடுத்து, இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக, நக்சல்களின் நடமாட்டமுள்ள பதற்றமான 20 வாக்குச்சாவடிகளுக்கு நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இதைத் தொடர்ந்து, வாக்குச்சாவடி ஊழியர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களோடு தங்களது வாக்குச்சாவடியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், கான்கேர் மாவட்டத்தின் 4 வாக்குச்சாவடிகளைச் சேர்ந்த குழுவினர் இன்று சென்றனர். மர்பேடா முகாமில் இருந்து ரெங்ககதி ரெங்ககொண்டி வாக்குச்சாவடிக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, சோடேபெட்டியா காவல் நிலையப் பகுதியில் சென்றபோது, மேம்படுத்தப்பட்ட வெடிபொருளான ஐ.இ.டி. வெடித்தது.

இச்சம்பவத்தில், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் மற்றும் வாக்குச்சாவடி ஊழியர்கள் 2 பேர் காயமடைந்தனர். இவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களது உடல்நிலை சீராக இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கான்கேர் மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

இதனிடையே, நாராயண்பூர் மாவட்டம் முர்ஹாபதர் கிராமத்தில் நக்சல்கள் வைத்திருந்த ஐ.இ.டி. வெடிகுண்டை இந்தோ திபெத் எல்லைக் காவல்படை வீரர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து, அக்குண்டை செயலிழக்கச் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக அக்குண்டு திடீரென வெடித்ததில் இந்தோ திபெத் எல்லைக் காவல்படையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்தார். இதைத் தொடர்ந்து, அப்பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

Tags: IED BlastElectionChhattisgarh
ShareTweetSendShare
Previous Post

தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் விடுமுறை!

Next Post

சேலஞ்சர் டென்னிஸ் : பட்டம் வென்ற இந்திய வீரர் !

Related News

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

எப்போ சார் திறப்பீங்க? – குமுறும் பொதுமக்கள்!

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

எனக்கு IAS, IPS என யாரையும் தெரியாது – நிகிதா ஆடியோ வெளியீடு!

அஜித்குமார் கொலை : அரசு மாணவர் விடுதி அருகே காவல்துறை வாகனம் நிற்கும் சிசிடிவி வெளியீடு!

அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

கனமழையால் பாதித்த மாநில முதல்வர்களுடன் பேசிய அமித்ஷா!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் : துணை மேயர் மகேஷ் குமார்

ஆசிரியர் தற்கொலை முயற்சி – பள்ளி வளாகத்தில் பரபரப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies