சத்தீஸ்கரில் ஐ.இ.டி. வெடிப்பு: 4 பேர் காயம்... பலத்த பாதுகாப்பு!
Mar 15, 2026, 01:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சத்தீஸ்கரில் ஐ.இ.டி. வெடிப்பு: 4 பேர் காயம்… பலத்த பாதுகாப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 6, 2023, 07:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடக்கவிருக்கும் நிலையில், நக்சல்கள் வைத்த ஐ.இ.டி. குண்டு வெடித்து எல்லைப் பாதுகாப்புப் படை வீரர், 2 வாக்குச்சாவடி ஊழியர்கள் மற்றும் இந்தோ திபெத் எல்லைக் காவல்படை வீரர் ஆகிய 4 பேர் காயமடைந்திருக்கின்றனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டமன்றத்தின் பதவிகாலம் விரைவில் நிறைவடைகிறது. இதையடுத்து, இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக, நக்சல்களின் நடமாட்டமுள்ள பதற்றமான 20 வாக்குச்சாவடிகளுக்கு நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இதைத் தொடர்ந்து, வாக்குச்சாவடி ஊழியர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களோடு தங்களது வாக்குச்சாவடியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், கான்கேர் மாவட்டத்தின் 4 வாக்குச்சாவடிகளைச் சேர்ந்த குழுவினர் இன்று சென்றனர். மர்பேடா முகாமில் இருந்து ரெங்ககதி ரெங்ககொண்டி வாக்குச்சாவடிக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, சோடேபெட்டியா காவல் நிலையப் பகுதியில் சென்றபோது, மேம்படுத்தப்பட்ட வெடிபொருளான ஐ.இ.டி. வெடித்தது.

இச்சம்பவத்தில், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் மற்றும் வாக்குச்சாவடி ஊழியர்கள் 2 பேர் காயமடைந்தனர். இவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களது உடல்நிலை சீராக இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கான்கேர் மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

இதனிடையே, நாராயண்பூர் மாவட்டம் முர்ஹாபதர் கிராமத்தில் நக்சல்கள் வைத்திருந்த ஐ.இ.டி. வெடிகுண்டை இந்தோ திபெத் எல்லைக் காவல்படை வீரர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து, அக்குண்டை செயலிழக்கச் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக அக்குண்டு திடீரென வெடித்ததில் இந்தோ திபெத் எல்லைக் காவல்படையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்தார். இதைத் தொடர்ந்து, அப்பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

Tags: ElectionChhattisgarhIED Blast
ShareTweetSendShare
Previous Post

தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் விடுமுறை!

Next Post

சேலஞ்சர் டென்னிஸ் : பட்டம் வென்ற இந்திய வீரர் !

Related News

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More

அண்மைச் செய்திகள்

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies