ஹமாஸ் தீவிரவாதிகளின் மேலும் 450 நிலைகள் அழிப்பு: இஸ்ரேல் அறிவிப்பு!
Jan 14, 2026, 10:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹமாஸ் தீவிரவாதிகளின் மேலும் 450 நிலைகள் அழிப்பு: இஸ்ரேல் அறிவிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 6, 2023, 07:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹமாஸ் தீவிரவாதிகளின் மேலும் 450 இலக்குகளை அழித்ததாகவும், ஹமாஸ் இராணுவ வளாகத்தைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருக்கிறது.

இஸ்ரேல் மீது காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீரென ஏவுகணைத் தாக்குதலை தொடுத்தனர். இதில், 1,400 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதனால் வெகுண்டெழுந்த இஸ்ரேல், ஹமாஸ் தீவிரவாதிகள் மீது அசுரத்தனமான தாக்குதலை நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் 10,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.

மேலும், இத்தாக்குதலின்போது ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர்கள், தளபதிகள் மற்றும் தீவிரவாதிகள் என 500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருக்கிறது. அதோடு, ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம், தீவிரவாத முகாம்கள், தீவிரவாதத் தலைவர்களின் வீடுகள் உட்பட 2,500 இலக்குகளை அழித்தது.

இந்த நிலையில்தான், ஹமாஸ் தீவிரவாதிகளின் மேலும் 450 இலக்குகளை அழித்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து இஸ்ரேல் இராணுவப் படைகளின் செய்தித்தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கூறுகையில், “முக்கியமான இடங்களில் தாக்குதல்களை தொடர்கிறோம். நாங்கள் காஸா முனைப் பகுதியை முற்றிலுமாக சுற்றி வளைத்து விட்டோம்.

மேலும், காஸா நகரை வடக்கு காஸா மற்றும் தெற்கு காஸா என இரண்டாக பிரித்து விட்டோம். வடக்கு காஸா மீது எந்நேரமும் தாக்குதல் நடத்தத் தயாராக உள்ளோம். அதேபோல, கடற்கரையையொட்டி உள்ள பகுதிகளை எங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டோம். தீவிரவாத அமைப்பினருக்குச் சொந்தமான பூமிக்கு அடியில் உள்ள சுரங்கங்கள், மேலே உள்ள தளங்கள், தளவாடங்கள் ஆகியவை மீதான தாக்குதல் தொடர்கிறது.

அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் காஸா பகுதி, சுரங்கப்பாதைகள், தீவிரவாத நிலைகள், இராணுவ வசதிகள், கண்காணிப்பு நிலையங்கள் மற்றும் தொட்டி எதிர்ப்பு ஏவுகணை ஏவுதளங்கள் உள்ளிட்ட மேலும் 450 ஹமாஸ் இலக்குகளை அழித்திருக்கிறோம். மேலும், காஸாவில் உள்ள ஹமாஸ் இராணுவ வளாகத்தையும் கைப்பற்றி இருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: IsraelHamas450 Targets
ShareTweetSendShare
Previous Post

வங்கதேசத்திற்கு 280 ரன்கள் இலக்கு !

Next Post

ஈரான் அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் ஆலோசனை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies