காங்கிரஸும் ஊழலும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் கர்கோனில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பங்கேற்று பேசினார். அப்போது, காங்கிரஸும் ஊழலும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என தெரிவித்த அவர், காங்கிரஸ் இருக்கும் இடமெல்லாம் ஊழல், அடக்குமுறை, கொள்ளை, மோசடிகள் இருக்கும் என்று தெரிவித்தார்.
எங்கெல்லாம் பாஜக இருக்கிறதோ, அங்கு வளர்ச்சியும், நலனும் இருக்கும் என்றும், இதுதான் காங்கிரஸ் ஆட்சிக்கும் பாஜகவின் ஆட்சிக்கும் உள்ள வித்தியாசம் என கூறினார்.
நான் ஏன் ஊழலைப் பற்றி பேசுகிறேன் என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஊழல் உங்களுக்கு நினைவிருக்கிறதா? உங்களுக்கு நிலக்கரி ஊழல் வழக்கு நினைவிருக்கிறதா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் அரசை இருளுடன் ஒப்பிட்ட பாஜக தலைவர், “காங்கிரஸ் அரசுக்கும் பாஜக அரசுக்கும் உள்ள வித்தியாசத்தை வெளிச்சத்திற்கும் இருளுக்கும் உள்ள வித்தியாசத்தை வைத்துப் புரிந்துகொள்ள முடியும் என்றார். அமாவாசைக்கும் பூர்ணமாசிக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்தால் புரியும்” என்றும் நட்டா கூறினார்.
காங்கிரஸ் ஆட்சியின் போது மத்தியப் பிரதேசம் பிமாரு மாநிலங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. தற்போது அது வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாகும். இதுதான் வித்தியாசம்” என்று அவர் கூறினார்.