‘பிரளய்’ ஏவுகணை சோதனை வெற்றி!
Sep 23, 2025, 06:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

‘பிரளய்’ ஏவுகணை சோதனை வெற்றி!

Web Desk by Web Desk
Nov 8, 2023, 01:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தரையிலிருந்து 500 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் ‘பிரளய்’ ஏவுகணை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம் (டி.ஆர்.டி.ஓ.), நாட்டின் பாதுகாப்பு தேவைகளுக்காக ஏவுகணைகள், வெடிகுண்டுகள், ரேடார்கள், மின்னணு சாதனங்கள் ஆகியவற்றைத் தயாரித்து வருகிறது. அந்த வகையில் ‘பிரளய்’ என்ற ஏவுகணையைத் தயாரித்துள்ளது.

இந்த ஏவுகணை, தரையில் இருந்து பாய்ந்து சென்று தரையில் உள்ள மற்றொரு இலக்கைத் தாக்கி அழிக்கும் பாலிஸ்டிக் இரக ஏவுகணை ஆகும். இது ‘பிரித்வி’ ஏவுகணையை முன்மாதிரியாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட திட எரிபொருள் ஏவுகணை ஆகும்.

இந்த ஏவுகணை 350 கிலோ மீட்டர் முதல் 500 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள, எதிரிகளின் இலக்கைத் தாக்கி அழிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 500 கிலோ முதல் 1,000 கிலோ வரை உள்ள ஆயுதங்களைச் சுமந்து சென்று தாக்கவல்லது.

இந்த நிலையில், ஒடிசா மாநிலம் பாலசோர் கடலோரத்தில் அமைந்துள்ள அப்துல் கலாம் தீவில் ‘பிரளய்’ ஏவுகணை சோதனை செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த ஏவுகணை அதன் இலக்கைத் துல்லியமாகத் தாக்கி அழித்தது. ஏவுகணை சென்ற பாதையைச் சாதனங்கள் துல்லியமாகக் கண்காணித்தன. திட்டத்தின் நோக்கங்கள் அனைத்தையும் ஏவுகணை பூர்த்தி செய்துள்ளது.

வரும் காலங்களில் சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகள் அருகே பாதுகாப்பிற்காக இந்த ஏவுகணைகள் நிறுத்தி வைக்கப்படும். இந்தியாவின் பிரளய் ஏவுகணை, சீன இராணுவத்தின் வசம் இருக்கும், ‘டாங் பெங் 12’ மற்றும் தற்போது உக்ரைன் போரில் இரஷ்யா பயன்படுத்தி வரும், ‘ஸ்கான்டர்’ ஏவுகணை ஆகியவற்றுக்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: indian armydrdo'Pralai' missile test success!
ShareTweetSendShare
Previous Post

மிசோராம் 80.05 %, சத்தீஸ்கர் 76.26 % வாக்குப்பதிவு!

Next Post

இல்லத்தில் இருந்தே வாக்களிக்கும் முதியவர்கள்!

Related News

அமெரிக்கா ஐசிசி-ஐ பொருளாதார தடைகளால் தாக்கக்கூடும்!

தெலங்கானா : அடுத்தடுத்து வீடுகளில் புகுந்து மர்மநபர்கள் துணிகர கொள்ளை!

களைக்கொல்லி மருந்தை தெளித்ததால் கருகி வரும் மக்காச்சோள பயிர்கள் : விவசாயிகள் வேதனை!

வாழப்பாடி அருகே விசாரணைக்கு சென்ற தலைமை காவலர் மீது தாக்குதல்!

பொக்கிஷமாக பார்க்கப்படும் மான் கொம்பு வண்டு : ஒரு வண்டு பல கோடி விலை போகுமாம்!

தற்சார்பு பாரதத்தை நோக்கி : GOOGLE MICROSOFT-க்கு மாற்றாக களமிறங்கும் ZOHO!

Load More

அண்மைச் செய்திகள்

சிறந்த துணை நடிகர் விருது பெற்றார் எம்.எஸ்.பாஸ்கர்!

தாதாசாகேப் பால்கே விருது பெற்ற மோகன்லால்!

முத்தாரம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தசரா திருவிழா தொடக்கம்!

கோடம்பாக்கத்தில் ஒரே இடத்தில் 4 முறைக்கு மேல் தோண்டப்பட்ட பள்ளம் – பொதுமக்கள் கடும் அவதி!

இத்தாலி : பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டம், வன்முறையாக மாறிய கோரம்!

அமெரிக்கா : டிரம்ப் வருகை – பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தடுத்து நிறுத்தம்!

தைவான் : அணை உடைந்ததால் ஊருக்குள் புகுந்த தண்ணீர்!

டெக்சாஸ் குடியரசு கட்சி தலைவரின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!

உசிலம்பட்டி அருகே அரசு மாணவர் விடுதியில் சக மாணவனை நிர்வாணப்படுத்தி தாக்கிய விவகாரம் – நான்கு சிறார்கள் மீது போலீசார் வழக்கு!

வடசென்னை அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies