இந்தியாவை தலைகுனிய வைக்கும் நிதிஷ்குமாரின் பேச்சு!
Mar 15, 2026, 07:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவை தலைகுனிய வைக்கும் நிதிஷ்குமாரின் பேச்சு!

பிரதமர் நரேந்திர மோடி ஆவேசம்!

Murugesan M by Murugesan M
Nov 8, 2023, 06:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் பெண்கள் தொடர்பான பேச்சு இந்தியாவை தலைகுணிய வைக்கும் வகையில் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பீகார் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான விவாதாம் நேற்று நடைபெற்றது. இதில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் பங்கேற்று பேசினார். அப்போது, படித்த பெண்கள் திருமணம் செய்து கொண்டால் கணவருடன் இருக்கும்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று தெரியும் என்றும், பெண்கள் கல்வி அறிவு பெறுவதன் மூலம் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.

பீகாரில் பெண்களின் கல்வியறிவு அதிகரித்துள்ளதாகவும், இதனால் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார். பீகாரில் குழந்தை பிறப்பு 4.3 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 2.9 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, இண்டி கூட்டணியில் உள்ள ஒரு தலைவர் சட்டப்பேரவையில் பெண்கள் குறித்து அநாகரிகமான வார்த்தைகளில் பேசியுள்ளார்.

இதற்கு அந்த கூட்டணி தலைவர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பெண்கள் விஷயத்தில் இப்படி நடந்து கொள்பவர்கள், ஏதாவது உங்களுக்கு நல்லது செய்வார்கள் என எதிர்பார்க்கிறீர்களா? என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.

அவர்கள் என்றைக்காவது பெண்களை மதித்திருக்கிறார்களா? உலகத்தின் முன் இந்தியாவைத் தலைகுனிய வைப்பது போல் நிதிஷ் குமாரின் பேச்சு உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இதேபோல் நிதிஷ்குமாரின் இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பீகார் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய பெண்கள் ஆணைய தலைவி அம்மாநில சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் பொறுப்பான பதவியில் இருப்பவர் பெண்களை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார். இதனை தேசிய மகளிர் ஆணையம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் அவரது இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. நிதிஷ் குமார் பேசிய பேச்சை சட்டசபை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

அன்பில் மகேஷ் குடும்பம் ஊழல் செய்கிறது! – அண்ணாமலை

Next Post

நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies