இந்தியாவை தலைகுனிய வைக்கும் நிதிஷ்குமாரின் பேச்சு!
Jan 14, 2026, 11:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவை தலைகுனிய வைக்கும் நிதிஷ்குமாரின் பேச்சு!

பிரதமர் நரேந்திர மோடி ஆவேசம்!

Murugesan M by Murugesan M
Nov 8, 2023, 06:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் பெண்கள் தொடர்பான பேச்சு இந்தியாவை தலைகுணிய வைக்கும் வகையில் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பீகார் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான விவாதாம் நேற்று நடைபெற்றது. இதில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் பங்கேற்று பேசினார். அப்போது, படித்த பெண்கள் திருமணம் செய்து கொண்டால் கணவருடன் இருக்கும்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று தெரியும் என்றும், பெண்கள் கல்வி அறிவு பெறுவதன் மூலம் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.

பீகாரில் பெண்களின் கல்வியறிவு அதிகரித்துள்ளதாகவும், இதனால் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார். பீகாரில் குழந்தை பிறப்பு 4.3 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 2.9 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, இண்டி கூட்டணியில் உள்ள ஒரு தலைவர் சட்டப்பேரவையில் பெண்கள் குறித்து அநாகரிகமான வார்த்தைகளில் பேசியுள்ளார்.

இதற்கு அந்த கூட்டணி தலைவர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பெண்கள் விஷயத்தில் இப்படி நடந்து கொள்பவர்கள், ஏதாவது உங்களுக்கு நல்லது செய்வார்கள் என எதிர்பார்க்கிறீர்களா? என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.

அவர்கள் என்றைக்காவது பெண்களை மதித்திருக்கிறார்களா? உலகத்தின் முன் இந்தியாவைத் தலைகுனிய வைப்பது போல் நிதிஷ் குமாரின் பேச்சு உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இதேபோல் நிதிஷ்குமாரின் இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பீகார் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய பெண்கள் ஆணைய தலைவி அம்மாநில சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் பொறுப்பான பதவியில் இருப்பவர் பெண்களை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார். இதனை தேசிய மகளிர் ஆணையம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் அவரது இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. நிதிஷ் குமார் பேசிய பேச்சை சட்டசபை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

அன்பில் மகேஷ் குடும்பம் ஊழல் செய்கிறது! – அண்ணாமலை

Next Post

நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!

Related News

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies