மறையப்போகும் சனிக்கோளின் வளையங்கள்: காரணம் என்ன?
Oct 3, 2025, 02:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மறையப்போகும் சனிக்கோளின் வளையங்கள்: காரணம் என்ன?

Web Desk by Web Desk
Nov 8, 2023, 07:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2025-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பூமியிலிருந்து சனி விலகிச் செல்வதால், சனி கோளின் வளையங்கள் நம் கண்களுக்குத் தெரியாது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சூரியக் குடும்பத்தில், புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் என எட்டுக் கோள்கள் உள்ளன. இவற்றில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகியவை சிறிய கோள்களாகவும், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவை பெரிய கோள்களாகவும் உள்ளன. சூரியக்குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்து அமைந்துள்ள இரண்டாவது பெரிய கோளாக சனிக்கோள் உள்ளது. மேலும், சனி கோளைச் சுற்றி வளையங்கள் உள்ளன.

இந்த நிலையில், வளையங்களுக்குப் பெயர் பெற்ற மாபெரும் கிரகமான சனி, விரைவில் தனது மகுடத்தை இழக்க உள்ளது. இதுகுறித்து நாசா கூறியதாவது, வளையங்கள் விரைவில் மறைந்துவிடும். சனியின் வளையங்கள் அதன் சுற்றுப்பாதையின் அச்சுக்குள் சாய்வதால் பூமியின் பார்வையில் இருந்து மறைந்துவிடும். சனி கிரகம் சூரியனைச் சுற்றி சுமார் 30 வருடங்கள் பயணம் செய்கிறது. இந்தப் பயணம் முழுவதும், கிரகத்தின் சாய்வின் அடிப்படையில், அதன் வளையங்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தெரியும் என்று தெரிவித்துள்ளது.

இந்த காட்சி மாயை 18 மாதங்களில், அதாவது 2025-ஆம் ஆண்டு நிகழவுள்ளது. அப்போது, சனியின் வளையம் நம் கண்களுக்குத் தெரியாது. தற்போது சனி பூமியுடன் 9 டிகிரி கோணத்தில் சாய்ந்துள்ளது. அதனால் நமக்கு இப்போது அந்த வளையம் தெரிகிறது. 2024-ஆம் ஆண்டில், இந்த கோணம் சுமார் 3.7 டிகிரியாகக் குறையும்.

இறுதியாக, 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பூமியிலிருந்து சனி விலகிச் செல்வதால், சனியின் அச்சு அதன் தற்போதைய சாய்ந்த நிலையில் இருந்து செங்குத்து நிலையைப் பெறும். அதாவது பூமியும் சனியும் ஒரே கோணத்தில் இருக்கும். இந்த நிகழ்வு 2032-ஆம் ஆண்டு வரை நீடிக்கும். பின்னர் வளையங்களின் அடிப்பகுதி நமது கண்களுக்கு வெளிப்படும் என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.

சனிக்கு ஏழு தனித்துவமான வளையங்கள் உள்ளன. அவை பனி, பாறை மற்றும் தூசி ஆகியவற்றால் ஆனது. நாசாவின் கூற்றுப்படி, இவை வால்மீன்கள், சிறுகோள்கள் மற்றும் சந்திரன்களின் எச்சங்கள் என்று நம்பப்படுகிறது. இந்த வளையங்கள் சுமார் 70 ஆயிரம் முதல் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் கிலோ மீட்டர்கள் வரை நீண்டுள்ளன. இது 30 பூமிகளின் அகலத்திற்கு சமம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: The fading rings of Saturn
ShareTweetSendShare
Previous Post

இரயிலில் பட்டாசுகள் கொண்டு சென்றால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம்! – இரயில்வே காவல்துறை

Next Post

அத்வானியை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் வெங்கையா நாயுடு!

Related News

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

ஆயுத பூஜை விடுமுறை – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

பொதுமக்களின் 70 % செலவு குறைப்பு ; மருத்துவத்துறையில் கலக்கும் மகாராஷ்ட்ரா – சிறப்பு கட்டுரை!

நேபாளம் – 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

சென்னை மதுரவாயல் நெடுஞ்சாலையில் தடுப்புகள் மீது கார் மோதி விபத்து – இருவர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.எம்.தமிழ்குமரன் நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

தேசியவாதிகளை வழக்குகளாலும் கைதுகளாலும் முடக்கிவிட முடியாது – நயினார் நாகேந்திரன்

சென்னையில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது – அண்ணாமலை கண்டனம்!

மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் ஆர்எஸ்எஸ் பணிகளால் ஈர்க்கப்பட்டனர் – ராம்நாத் கோவிந்த்

ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞர் – தர்ம அடி கொடுத்து போலீசிலில் ஒப்படைத்த பொதுமக்கள்!

தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு – கொடைக்கானல் மக்கள் கவலை!

பட்டாசு விற்பனை மந்தம் – சிவகாசி வியாபாரிகள் கவலை!

மகாத்மா காந்தி இறப்புக்கு பிறகு சுதேசியை மறந்து விட்டோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி உரை!

அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விக்கிரவாண்டி அருகே கார் விபத்து – சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies