மறையப்போகும் சனிக்கோளின் வளையங்கள்: காரணம் என்ன?
Sep 12, 2026, 11:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மறையப்போகும் சனிக்கோளின் வளையங்கள்: காரணம் என்ன?

Murugesan M by Murugesan M
Nov 8, 2023, 07:52 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2025-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பூமியிலிருந்து சனி விலகிச் செல்வதால், சனி கோளின் வளையங்கள் நம் கண்களுக்குத் தெரியாது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சூரியக் குடும்பத்தில், புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் என எட்டுக் கோள்கள் உள்ளன. இவற்றில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகியவை சிறிய கோள்களாகவும், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவை பெரிய கோள்களாகவும் உள்ளன. சூரியக்குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்து அமைந்துள்ள இரண்டாவது பெரிய கோளாக சனிக்கோள் உள்ளது. மேலும், சனி கோளைச் சுற்றி வளையங்கள் உள்ளன.

இந்த நிலையில், வளையங்களுக்குப் பெயர் பெற்ற மாபெரும் கிரகமான சனி, விரைவில் தனது மகுடத்தை இழக்க உள்ளது. இதுகுறித்து நாசா கூறியதாவது, வளையங்கள் விரைவில் மறைந்துவிடும். சனியின் வளையங்கள் அதன் சுற்றுப்பாதையின் அச்சுக்குள் சாய்வதால் பூமியின் பார்வையில் இருந்து மறைந்துவிடும். சனி கிரகம் சூரியனைச் சுற்றி சுமார் 30 வருடங்கள் பயணம் செய்கிறது. இந்தப் பயணம் முழுவதும், கிரகத்தின் சாய்வின் அடிப்படையில், அதன் வளையங்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தெரியும் என்று தெரிவித்துள்ளது.

இந்த காட்சி மாயை 18 மாதங்களில், அதாவது 2025-ஆம் ஆண்டு நிகழவுள்ளது. அப்போது, சனியின் வளையம் நம் கண்களுக்குத் தெரியாது. தற்போது சனி பூமியுடன் 9 டிகிரி கோணத்தில் சாய்ந்துள்ளது. அதனால் நமக்கு இப்போது அந்த வளையம் தெரிகிறது. 2024-ஆம் ஆண்டில், இந்த கோணம் சுமார் 3.7 டிகிரியாகக் குறையும்.

இறுதியாக, 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பூமியிலிருந்து சனி விலகிச் செல்வதால், சனியின் அச்சு அதன் தற்போதைய சாய்ந்த நிலையில் இருந்து செங்குத்து நிலையைப் பெறும். அதாவது பூமியும் சனியும் ஒரே கோணத்தில் இருக்கும். இந்த நிகழ்வு 2032-ஆம் ஆண்டு வரை நீடிக்கும். பின்னர் வளையங்களின் அடிப்பகுதி நமது கண்களுக்கு வெளிப்படும் என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.

சனிக்கு ஏழு தனித்துவமான வளையங்கள் உள்ளன. அவை பனி, பாறை மற்றும் தூசி ஆகியவற்றால் ஆனது. நாசாவின் கூற்றுப்படி, இவை வால்மீன்கள், சிறுகோள்கள் மற்றும் சந்திரன்களின் எச்சங்கள் என்று நம்பப்படுகிறது. இந்த வளையங்கள் சுமார் 70 ஆயிரம் முதல் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் கிலோ மீட்டர்கள் வரை நீண்டுள்ளன. இது 30 பூமிகளின் அகலத்திற்கு சமம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: The fading rings of Saturn
Share
Tweet
SendShare
Previous Post

இரயிலில் பட்டாசுகள் கொண்டு சென்றால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம்! – இரயில்வே காவல்துறை

Next Post

அத்வானியை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் வெங்கையா நாயுடு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies