யானை தந்தங்கள் பறிமுதல்: 3 பேர் அதிரடி கைது!
Oct 23, 2025, 08:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யானை தந்தங்கள் பறிமுதல்: 3 பேர் அதிரடி கைது!

Web Desk by Web Desk
Nov 9, 2023, 06:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே யானை தந்தங்களைக் கடத்திய 3 பேரை மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். 21.63 கிலோ எடையுள்ள யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சர்வதேச எல்லைகளைத் தாண்டி கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை மேற்கொண்டு வருகிறது. தங்கம், போதைப் பொருட்கள், கள்ள நோட்டுகள், பழம்பொருட்கள், துப்பாக்கிகள், வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பொருட்கள் உள்ளிட்டவற்றைக் கடத்துவதைத் தடுத்து இந்தியாவின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பவர்களாக உள்ளனர்.

2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972 பிரிவு 50-இல் திருத்தம் செய்யப்பட்டது. இதன் காரணமாக, இந்தியாவிற்குள் சட்டவிரோத விற்பனை செய்யப்படும் வனவிலங்கு பொருட்களைப் பறிமுதல் செய்வதற்கு மத்திய புலனாய்வுத் துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே சிலர் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதாக வருவாய் புலனாய்வுத் துறைக்குத் தகவல் கிடைத்தது. அந்த இடத்தில் சந்தேகத்திற்கிடமான 3 பேரை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களுடைய பையில் 21.63 கிலோ எடையுள்ள இரண்டு யானைத் தந்தங்கள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதை அடுத்து யானை தந்தங்களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், மூன்று பேரையும் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம் 1972-இன் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுப்பதற்கும் இந்த யானைத் தந்தங்களை இவர்களிடம் கொடுத்த மர்ம கும்பலைப் பிடிப்பதற்காகவும் கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கடந்த ஜூன் மாதம் சென்னை புறநகரில் சாலையில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்ட போது ஒரு ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 4 கிலோ எடையுடைய யானை தந்தத்தைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அது தொடர்பாக ஏழு பேரைக் கைது செய்து மாநில வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

கடந்த சில ஆண்டுகளில், 29 யானைகள் வேட்டையாடப்பட்டுள்ளன. 90 யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Tags: elephant3 arrested
ShareTweetSendShare
Previous Post

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மீதான விசாரணை அறிக்கை நாளை தாக்கல்!

Next Post

சொல்வது ஒன்று… செய்வது ஒன்று என மீண்டும் நிரூபித்துள்ளது திமுக! – வானதி சீனிவாசன்

Related News

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ : டெஸ்லா சென்சாரில் பதிவானது பேய்களா?

ஐரோப்பாவில் இப்படி ஒரு நாடா?

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

78,000 கோடி நிதி எங்கு சென்றது : முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – அண்ணாமலை

திமுக அரசின் அலட்சியத்தால் டெல்டா மாவட்டங்களில் 20 லட்சம் டன் நெல் வீண் – எல். முருகன்

Load More

அண்மைச் செய்திகள்

ராஜஸ்தான் : பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய மாவட்ட நீதிபதி!

ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் சாலைகள் சேதம் : வாகன ஓட்டிகள் கடும் அவதி!

மாங்காடு அருகே மழைநீரில் மூழ்கி பெண் குழந்தை உயிரிழப்பு!

குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் சென்னை சாலைகள்!

புதிய வகை சைபர் குற்றத்தை வெளிச்சமிட்டு காட்டிய சமூக ஊடகங்கள்!

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தகர்த்த உக்ரைன்!

விருத்தாசலத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் முளைத்து சேதமடைந்த நெற்பயிர்கள்!

கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக் கூடாது – இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நெல் ஈரப்பதம் : ஆய்வு நடத்த குழு அமைப்பு – மத்திய அரசு

திருச்சி : அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கிச் சேதம் – விவசாயிகள் வேதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies