யானை தந்தங்கள் பறிமுதல்: 3 பேர் அதிரடி கைது!
Jan 14, 2026, 08:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யானை தந்தங்கள் பறிமுதல்: 3 பேர் அதிரடி கைது!

Murugesan M by Murugesan M
Nov 9, 2023, 06:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே யானை தந்தங்களைக் கடத்திய 3 பேரை மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். 21.63 கிலோ எடையுள்ள யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சர்வதேச எல்லைகளைத் தாண்டி கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை மேற்கொண்டு வருகிறது. தங்கம், போதைப் பொருட்கள், கள்ள நோட்டுகள், பழம்பொருட்கள், துப்பாக்கிகள், வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பொருட்கள் உள்ளிட்டவற்றைக் கடத்துவதைத் தடுத்து இந்தியாவின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பவர்களாக உள்ளனர்.

2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972 பிரிவு 50-இல் திருத்தம் செய்யப்பட்டது. இதன் காரணமாக, இந்தியாவிற்குள் சட்டவிரோத விற்பனை செய்யப்படும் வனவிலங்கு பொருட்களைப் பறிமுதல் செய்வதற்கு மத்திய புலனாய்வுத் துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே சிலர் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதாக வருவாய் புலனாய்வுத் துறைக்குத் தகவல் கிடைத்தது. அந்த இடத்தில் சந்தேகத்திற்கிடமான 3 பேரை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களுடைய பையில் 21.63 கிலோ எடையுள்ள இரண்டு யானைத் தந்தங்கள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதை அடுத்து யானை தந்தங்களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், மூன்று பேரையும் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம் 1972-இன் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுப்பதற்கும் இந்த யானைத் தந்தங்களை இவர்களிடம் கொடுத்த மர்ம கும்பலைப் பிடிப்பதற்காகவும் கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கடந்த ஜூன் மாதம் சென்னை புறநகரில் சாலையில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்ட போது ஒரு ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 4 கிலோ எடையுடைய யானை தந்தத்தைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அது தொடர்பாக ஏழு பேரைக் கைது செய்து மாநில வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

கடந்த சில ஆண்டுகளில், 29 யானைகள் வேட்டையாடப்பட்டுள்ளன. 90 யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Tags: elephant3 arrested
ShareTweetSendShare
Previous Post

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மீதான விசாரணை அறிக்கை நாளை தாக்கல்!

Next Post

சொல்வது ஒன்று… செய்வது ஒன்று என மீண்டும் நிரூபித்துள்ளது திமுக! – வானதி சீனிவாசன்

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies