யானை தந்தங்கள் பறிமுதல்: 3 பேர் அதிரடி கைது!
Apr 29, 2026, 10:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யானை தந்தங்கள் பறிமுதல்: 3 பேர் அதிரடி கைது!

Murugesan M by Murugesan M
Nov 9, 2023, 06:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே யானை தந்தங்களைக் கடத்திய 3 பேரை மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். 21.63 கிலோ எடையுள்ள யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சர்வதேச எல்லைகளைத் தாண்டி கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை மேற்கொண்டு வருகிறது. தங்கம், போதைப் பொருட்கள், கள்ள நோட்டுகள், பழம்பொருட்கள், துப்பாக்கிகள், வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பொருட்கள் உள்ளிட்டவற்றைக் கடத்துவதைத் தடுத்து இந்தியாவின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பவர்களாக உள்ளனர்.

2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972 பிரிவு 50-இல் திருத்தம் செய்யப்பட்டது. இதன் காரணமாக, இந்தியாவிற்குள் சட்டவிரோத விற்பனை செய்யப்படும் வனவிலங்கு பொருட்களைப் பறிமுதல் செய்வதற்கு மத்திய புலனாய்வுத் துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே சிலர் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதாக வருவாய் புலனாய்வுத் துறைக்குத் தகவல் கிடைத்தது. அந்த இடத்தில் சந்தேகத்திற்கிடமான 3 பேரை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களுடைய பையில் 21.63 கிலோ எடையுள்ள இரண்டு யானைத் தந்தங்கள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதை அடுத்து யானை தந்தங்களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், மூன்று பேரையும் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம் 1972-இன் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுப்பதற்கும் இந்த யானைத் தந்தங்களை இவர்களிடம் கொடுத்த மர்ம கும்பலைப் பிடிப்பதற்காகவும் கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கடந்த ஜூன் மாதம் சென்னை புறநகரில் சாலையில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்ட போது ஒரு ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 4 கிலோ எடையுடைய யானை தந்தத்தைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அது தொடர்பாக ஏழு பேரைக் கைது செய்து மாநில வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

கடந்த சில ஆண்டுகளில், 29 யானைகள் வேட்டையாடப்பட்டுள்ளன. 90 யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Tags: elephant3 arrested
ShareTweetSendShare
Previous Post

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மீதான விசாரணை அறிக்கை நாளை தாக்கல்!

Next Post

சொல்வது ஒன்று… செய்வது ஒன்று என மீண்டும் நிரூபித்துள்ளது திமுக! – வானதி சீனிவாசன்

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies