சிறையில் இருந்து வெளியே வந்தார் அமர் பிரசாத் ரெட்டி!
Jan 14, 2026, 08:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறையில் இருந்து வெளியே வந்தார் அமர் பிரசாத் ரெட்டி!

Murugesan M by Murugesan M
Nov 11, 2023, 02:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக அரசின் பொய் வழக்குகளால் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த, தமிழக பாஜக திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவையொட்டி, சிறையில் இருந்து வெளியே வந்தார்.

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் வீட்டின் முன்புறம் இருந்த பாஜக கொடிக் கம்பத்தைக் கடந்த 21-ம் தேதி சென்னை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றிய போது, காவல்துறையினருக்கும் பாஜக தொண்டர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில், ஜேசிபி வாகனத்தைச் சேதப்படுத்தியதாகக் கூறி, தமிழகபாஜக திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரை கானாத்தூர் காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அமர் பிரசாத் ரெட்டிக்கு, நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 55 அடி உயரக் கொடிக்கம்பம் வைத்தால் மக்கள் கண்ணுக்குத் தெரியவே தெரியாது என்றும், ஜேசிபி வாகனத்தைச் சேதப்படுத்தியதற்காக எத்தனை நாட்கள் சிறையில் வைத்திருப்பீர்கள் என நீதிபதி காவல்துறைக்குக் கேள்வி எழுப்பினார்.

இதனிடையே, சேதப்படுத்தப்பட்ட ஜேசிபி வாகனத்தின் உரிமையாளருக்கு ரூபாய் 12,000 வழங்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட இடத்தில் மீண்டும் கொடிக்கம்பம் வைக்க மாட்டோம் எனப் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் அண்ணாமலை நடைப் பயணத்தின்போது, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன் வழங்கி அம்பாசமுத்திரம் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கனவே, ஒரு வழக்கில் அமர் பிரசாத் ரெட்டி-க்கு ஜாமீன் வழங்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், சென்னை புழல் சிறையில் இருந்து, தமிழகபாஜக திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி வெளியே வந்தார். அவருக்கு, பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் கட்டியணைத்து வரவேற்பு கொடுத்தனர்.

சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட அமர் பிரசாத் ரெட்டி, தமிழக பாஜகவின் தலைமை அலுவலகமான சென்னை தி நகரில் உள்ள கமலாலயத்திற்கு வருகை தந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையே இந்த கைது. திமுகவின் பொய் வழக்குகளுக்கு யாரும் அஞ்சமாட்டோம். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும் என்றார்.

Tags: bjpamal prasad reddy
ShareTweetSendShare
Previous Post

நடிகர் சந்திரமோகன் காலமானார்!

Next Post

நடிகர் கங்கா மரணம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies