அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு 10 கோடி குடும்பங்களுக்கு அழைப்பு!
Oct 3, 2025, 06:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு 10 கோடி குடும்பங்களுக்கு அழைப்பு!

விஷ்வ ஹிந்து பரிஷத் அறிவிப்பு!

Web Desk by Web Desk
Nov 14, 2023, 10:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தியில் ஜனவரி 22-ம் தேதி நடைபெறும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க 10 கோடி குடும்பங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் மத்திய செயல் தலைவர் அலோக் குமார், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நவம்பர் 5 ஆம் தேதி ஸ்ரீ ராம ஜென்ம பூமி கோவிலில் புனிதப்படுத்தப்பட்ட ‘அக்ஷத கலசம்’ ஏற்கனவே நாடு முழுவதும் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

விஷ்வ ஹிந்து பரிஷத் தொண்டர்கள், பிற இந்து அமைப்புகளுடன் சேர்ந்து, நாட்டின் நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள இந்துக் குடும்பங்களுக்கு 2024 ஜனவரி 1 முதல் ஜனவரி 15 வரை சென்று கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். வெளிநாட்டில் வாழும் இந்துக்களை அழைக்கவும் இதேபோன்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அழைப்பிதழுடன், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான தகவல்களைக் கொண்ட பகவான் ராமர் மற்றும் கோவிலின் படத்தை வழங்குவோம் என்றும் அவர் கூறினார், இது தொடர்பாக ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்த பணியில் ஈடுபடும் விஎச்பி குழுக்கள் மற்றும் தொழிலாளர்கள் பக்தர்களிடம் இருந்து ‘எந்தவொரு அன்பளிப்பு, நன்கொடை அல்லது பிற பொருட்களையும் ஏற்க மாட்டார்கள் என்று குமார் கூறினார்.

உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் தங்கள் அருகிலுள்ள கோவிலில் கூடி ஜனவரி 22 அன்று பூஜை செய்யுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.விழாவில் பங்கேற்ற இயலாதவர்கள் ‘பிரமாண்ட’ கும்பாபிஷேகத்தின் நேரடி ஒளிபரப்பைப் பார்த்து, இந்த வரலாற்று நிகழ்வை அனுபவிக்கவும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கும்பாபிஷேக விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி, உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

14 ஆண்டுகளுக்குப் பிறகு (வனவாசம்) அயோத்திக்கு பகவான் ஸ்ரீராம் திரும்பியதைக் குறிக்கும் வகையில் நாங்கள் தீபாவளியைக் கொண்டாடுகிறோம், ஆனால் 500 ஆண்டுகளுக்குப் பிறகு அமிர்த காலத்தின் போது ராம் ஜி தனது பிறந்த இடத்திற்குத் திரும்பும் 2024 ஜனவரி 22 அன்று உலகம் இரண்டாவது தீபாவளியை கொண்டாடும் என்றும் அவர் கூறினார்.

எனவே, இந்த ‘பிரான் பிரதிஷ்டை’ (கும்பாபிஷேகம்) விழாவில் உலகெங்கிலும் உள்ள இந்து சமுதாயமும் பங்கேற்க வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

ராம ஜென்மபூமி இயக்கத்தின் போது தங்கள் உயிரை தியாகம் செய்தவர்களின் குடும்பத்தினர் ராமர் கோவிலுக்கு செல்ல வசதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அத்தகைய பக்தர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 27 முதல் பிப்ரவரி 22 வரை சிறிய குழுக்களாக அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் அலோக் குமார், கூறினார்.

Tags: ayodhya ramar temple
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 60.70 அடியாக உயர்வு!

Next Post

காங்கிரஸ் தேர்தலில் தோற்பதற்கான கவுன்டவுன் தொடங்கி விட்டது! – பிரதமர் மோடி

Related News

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

5ம் தமிழ் சங்க அமைப்பினை கண்டித்து விஷ்வ இந்து பரிஷித் போராட்டம்!

கரூர் சம்பவம் – நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர் – நீதிபதிகள்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

Load More

அண்மைச் செய்திகள்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

வியட்நாம் : புவாலோ புயல், வெள்ளத்தால் 51 பேர் பலி!

செர்பியா : கடும் பனிப்பொழிவு – வீடுகளில் முடங்கிய மக்கள்!

சேலம் : விற்பனை ஆகாத பொருட்களை ஆங்காங்கே கொட்டிய வியாபாரிகள்!

கரூரில் பெருந்துயர சம்பவம் – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்.டி.ஏ குழு கடிதம்!

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்குள் காட்டு யானை – பக்தர்கள் அச்சம்!

அமெரிக்கா : வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய பூனை!

மயிலாடுதுறை : சாரங்கபாணி நினைவு மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் – இன்று முதல் போக்குவரத்திற்கு தடை!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies