அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு 10 கோடி குடும்பங்களுக்கு அழைப்பு!
Apr 29, 2026, 09:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு 10 கோடி குடும்பங்களுக்கு அழைப்பு!

விஷ்வ ஹிந்து பரிஷத் அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Nov 14, 2023, 10:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தியில் ஜனவரி 22-ம் தேதி நடைபெறும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க 10 கோடி குடும்பங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் மத்திய செயல் தலைவர் அலோக் குமார், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நவம்பர் 5 ஆம் தேதி ஸ்ரீ ராம ஜென்ம பூமி கோவிலில் புனிதப்படுத்தப்பட்ட ‘அக்ஷத கலசம்’ ஏற்கனவே நாடு முழுவதும் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

விஷ்வ ஹிந்து பரிஷத் தொண்டர்கள், பிற இந்து அமைப்புகளுடன் சேர்ந்து, நாட்டின் நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள இந்துக் குடும்பங்களுக்கு 2024 ஜனவரி 1 முதல் ஜனவரி 15 வரை சென்று கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். வெளிநாட்டில் வாழும் இந்துக்களை அழைக்கவும் இதேபோன்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அழைப்பிதழுடன், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான தகவல்களைக் கொண்ட பகவான் ராமர் மற்றும் கோவிலின் படத்தை வழங்குவோம் என்றும் அவர் கூறினார், இது தொடர்பாக ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்த பணியில் ஈடுபடும் விஎச்பி குழுக்கள் மற்றும் தொழிலாளர்கள் பக்தர்களிடம் இருந்து ‘எந்தவொரு அன்பளிப்பு, நன்கொடை அல்லது பிற பொருட்களையும் ஏற்க மாட்டார்கள் என்று குமார் கூறினார்.

உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் தங்கள் அருகிலுள்ள கோவிலில் கூடி ஜனவரி 22 அன்று பூஜை செய்யுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.விழாவில் பங்கேற்ற இயலாதவர்கள் ‘பிரமாண்ட’ கும்பாபிஷேகத்தின் நேரடி ஒளிபரப்பைப் பார்த்து, இந்த வரலாற்று நிகழ்வை அனுபவிக்கவும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கும்பாபிஷேக விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி, உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

14 ஆண்டுகளுக்குப் பிறகு (வனவாசம்) அயோத்திக்கு பகவான் ஸ்ரீராம் திரும்பியதைக் குறிக்கும் வகையில் நாங்கள் தீபாவளியைக் கொண்டாடுகிறோம், ஆனால் 500 ஆண்டுகளுக்குப் பிறகு அமிர்த காலத்தின் போது ராம் ஜி தனது பிறந்த இடத்திற்குத் திரும்பும் 2024 ஜனவரி 22 அன்று உலகம் இரண்டாவது தீபாவளியை கொண்டாடும் என்றும் அவர் கூறினார்.

எனவே, இந்த ‘பிரான் பிரதிஷ்டை’ (கும்பாபிஷேகம்) விழாவில் உலகெங்கிலும் உள்ள இந்து சமுதாயமும் பங்கேற்க வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

ராம ஜென்மபூமி இயக்கத்தின் போது தங்கள் உயிரை தியாகம் செய்தவர்களின் குடும்பத்தினர் ராமர் கோவிலுக்கு செல்ல வசதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அத்தகைய பக்தர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 27 முதல் பிப்ரவரி 22 வரை சிறிய குழுக்களாக அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் அலோக் குமார், கூறினார்.

Tags: ayodhya ramar temple
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 60.70 அடியாக உயர்வு!

Next Post

காங்கிரஸ் தேர்தலில் தோற்பதற்கான கவுன்டவுன் தொடங்கி விட்டது! – பிரதமர் மோடி

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies