உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க தீவிர நடவடிக்கை!
Mar 16, 2026, 12:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க தீவிர நடவடிக்கை!

40 தொழிலாளர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Nov 14, 2023, 12:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரகாண்ட் சில்க்யாரா சுரங்கப்பாதை விபத்தில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை விரைவில் மீட்க ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள தண்டல்கான் பகுதியை சில்க்யாரா பகுதியுடன் இணைக்கும் விதமாக சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் நடைபெற்று வருகிறது. சார் தாம் சாலை திட்டத்தின் ஒருபகுதியாக, உத்தர்காசியிலிருந்து யமுனோத்ரி தாம் வரையிலான பயணத்தை 26 கிலோ மீட்டர் குறைக்கும் நோக்கத்தில் சுமார் 1,383 கோடி செலவில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

கடந்த 12ஆம் தேதி அதிகாலை பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா மற்றும் தண்டல்கான் இடையே கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சுமார் 40 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

இதனையடுத்து அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக மாநில பேரிடர் மீட்பு படை உத்தரகாண்ட் கமாண்டன்ட் மணிகாந்த் மிஸ்ரா செய்தியாளர்களிடம் பேசினார்.

உணவுப் பொருட்கள் மற்றும் சில மருந்துகள் இன்று தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், சிக்கியுள்ள தொழிலாளர்களிடம் தாம் பேசியதாகவும் அவர் கூறினார். 40 தொழிலாளர்களும் நலமாக இருப்பதாக தெரிவித்ததாகவும், விரைவில் அவர்கள் மீட்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags: central government
ShareTweetSendShare
Previous Post

டிக்டாக் செயலிக்குத் தடை: நேபாள அரசு அதிரடி!

Next Post

வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதலை நிறுத்த நடவடிக்கை தேவை!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies