சென்னை விமான நிலையம்: உள்நாட்டு முனையத்தில் இன்று முதல் 2 பிரிவுகள்!
Oct 23, 2025, 02:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை விமான நிலையம்: உள்நாட்டு முனையத்தில் இன்று முதல் 2 பிரிவுகள்!

Web Desk by Web Desk
Nov 15, 2023, 11:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையம் இன்று முதல், ‘டெர்மினல் – 1, டெர்மினல் – 4’ என, இரண்டு பிரிவுகளாக செயல்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில், புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையத்தை, 2 இலட்சத்து 21 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில், 2 ஆயிரத்து 467 கோடி ரூபாய் செலவில், இரண்டு கட்டங்களாக கட்ட, இந்திய விமான நிலைய ஆணையம், 2018-ஆம் ஆண்டு பணிகளைத் தொடங்கியது.

முதல் கட்ட பணி, 1 இலட்சத்து 36 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில், ஆயிரத்து 260 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த சர்வதேச முனையம், டெர்மினல் – 2 பிரிவை கடந்த ஏப்ரல் மாதம் பாரத பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

ஏற்கனவே சர்வதேச முனையமாக செயல்பட்ட, டெர்மினல் – 3 மற்றும் 4 முழுவதுமாக மூடப்பட்டன. டெர்மினல் – 3-ஐ இடிக்கும் பணி நடந்து வருகிறது. அந்தப் பணி முடிவடைந்ததும், இரண்டாம் கட்ட கட்டுமான பணி தொடங்கும்.

பழைய சர்வதேச முனையத்தின், டெர்மினல் – 4, நல்ல நிலையில் இருப்பதால், அதை இடிக்காமல், கூடுதல் உள்நாட்டு முனையமாக பயன்படுத்த, இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது. அதை மாற்றி அமைக்கும் பணி முடிந்துள்ளது. நேற்று டெர்மினல் – 4-ல், சோதனை அடிப்படையில், விமானங்கள் தரையிறங்குவது மற்றும் புறப்படுவது நடந்தது.

இன்று அதிகாலையில் இருந்து புதிய உள்நாட்டு முனையமான டெர்மினல் – 4, முழு அளவில் செயல்பாட்டிற்கு வருகிறது.

இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது: புதிய உள்நாட்டு முனையமான டெர்மினல் – 4-ல், ஏர் இந்தியா மற்றும் அதைச் சார்ந்த அலயன்ஸ் ஏர் விமானங்கள் இயக்கப்படும் டெர்மினல் – 1ல், இண்டிகோ உள்ளிட்ட மற்ற விமான நிறுவனங்களின் விமானங்கள் இயக்கப்படும்.

சென்னை உள்நாட்டு விமான நிலையம், டெர்மினல் – 1, டெர்மினல் – 4 என்று இரு முனையங்களாக பிரிக்கப்பட்டுள்ளதால், பயணியருக்கு இட நெருக்கடி இல்லாமல், கூடுதல் இடவசதி கிடைக்கும். அதோடு கூடுதல் உள்நாட்டு விமானச் சேவைகளும் தொடங் உள்ளது என்று கூறினார்கள்.

Tags: chennai airport second terminal
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி கோவில் ஊழியர்களுக்கு ரூ.20 கோடி மதிப்பில் பிரம்மோற்சவ சன்மானம்!

Next Post

உலக சி.ஓ.பி.டி. தினம் !

Related News

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

பீகார் தேர்தலில் பலவீனமாகும் மகா கூட்டணி – ஆர்.ஜே.டி. காங்., உறவில் விரிசல்!

இந்தியர்களை அடிமைகளாக்கும் கஃபாலா : சவுதி அரேபியா ரத்து செய்தது ஏன்?

தீபாவளி வாழ்த்து சொன்ன ட்ரம்ப் : பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் என மோடி பதில்!

அமெரிக்காவுடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகிறது : இந்தியா மீதான வரி 16 சதவீதமாக குறைய வாய்ப்பு!

ஹிஜாப் சட்டத்தை மீறிய ஈரான் அதிகாரிகள் : கொந்தளித்த மக்கள் -“STRAPLESS” உடையில் தென்பட்ட மணமகளின் வீடியோவால் சர்ச்சை…!

Load More

அண்மைச் செய்திகள்

PM SHRI திட்டத்தில் இணையும் கேரள அரசு : வீம்பு செய்யும் தமிழக அரசால் வீணாகும் மாணவர் எதிர்காலம்!

புதின்-ட்ரம்ப் சந்திப்பு ரத்து : ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த முயற்சி தோல்வி ஏன்?

தஞ்சையில் தொடர் மழை : மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கிய 30 ஆயிரம் நெல் மூட்டைகள்!

மாறும் தெற்காசிய அரசியல் : புதிய பாதையில் பயணிக்கும் இந்தியா- ஆப்கனிஸ்தான்!

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் புதிய திருப்புமுனை : A ரத்த வகை சிறுநீரகத்தை Universal Kidney- ஆக மாற்றி சாதனை!

ராமநாதபுரம் : நீரில் மூழ்கிய ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் – கண்ணீரில் விவசாயிகள்!

உக்ரைன் போரை நிறுத்த புதிய முயற்சி : ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடை விதிக்க வாய்ப்பு!

முதல்வர் ஸ்டாலின் சத்தமே இல்லாமல் சாராய விற்பனையில் கல்லா கட்டுக்கிறார் – நயினார் நாகேந்திரன்

ஹலால் நிதி பயங்கரவாதத்திற்கு பயன்படுத்தப்படுகிறது – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு!

செயற்கை மழைக்கான நடவடிக்கைகள் தயார் – மஜிந்தர் சிங் சிர்சா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies