மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் முதல் அரையிறுதிப் போட்டியை காண பாலிவுட் நட்சத்திரங்கள் குவிந்துள்ளனர்.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது.
இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
அதன்படி இந்திய அணி முதலில் பாட்டிங்க ஆடி வருகிறது. முன்னதாக இப்போட்டியை காண கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் மும்பை சென்றார்.
அவரைத் தொடர்ந்து தற்போது பாலிவுட் நட்சத்திரங்கள் இப்போட்டியை காண மைதானத்தில் உள்ளனர். மைதானத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி, நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா, ஜான் ஆபிரகாம் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோர் மைதானத்தில் அமர்ந்து இப்போட்டியை இரசித்துவருகின்றனர்.
அவர்களோடு இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மற்றும் பல வீரர்கள் கலந்துரையாடினர்.