நியூசிலாந்து பந்தை தெறிக்கவிட்ட இந்திய வீரர்கள் !
Jan 14, 2026, 04:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நியூசிலாந்து பந்தை தெறிக்கவிட்ட இந்திய வீரர்கள் !

அரையிறுதி போட்டியை வெற்றி பெற நியூசிலாந்து அணிக்கு 398 ரன்கள் இலக்கு!

Murugesan M by Murugesan M
Nov 15, 2023, 06:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 397 ரன்களை எடுத்துள்ளது.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகிறது. இந்தத் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இதில் ரோஹித் சர்மா வழக்கம் போல் பவர் பிலேவில் தனது அதிரடியான ஆட்டத்தை தொடங்கினார்.

ரோஹித் சர்மா அடிக்கும் பந்து எல்லாம் சிக்சர்கள் மற்றும் பௌண்டரிசாக சென்றுக் கொண்டிருந்தன. இப்படி அதிரடியாக விளையாடி வந்த ரோஹித் சர்மா 9 வது ஓவரில் 29 பந்துகளில் 47 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து விராட் கோலி களமிறங்கினர். இவருடன் தொடக்க வீரராக விளையாடி வந்த கில் தனது ரன் வேட்டையை ஆரம்பித்தார்.

சிறப்பாக விளையாடி வந்த சுப்மன் கில்லுக்கு திடீரென காலில் அடிபட்டதால் ரிடைர் ஹுர்ட் மூலம் விளையாட்டை தொடர முடியாமல் வெளியேறினார்.

இவரைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் விராட் கோலி கூட்டணி மிகவும் சிறப்பாக செயல்பட்டு வந்தது.

ஆரபத்தில் இருவரும் நிதானமாக விளையாடினாலும் போக போக இருவரும் தங்களின் அட்டகாசமான ஆட்டத்தை காண்பித்தனர்.

விராட் கோலி ஒரு பக்கம் பௌண்டரிசாக அடித்து நொறுக்க, ஸ்ரேயாஸ் ஐயர் மறுபக்கம் சிக்சர்களாக வெளுத்து வாங்கினார்.

அப்போது விராட் கோலி தனது 50 வது சதத்தை அடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். அதற்கு சச்சின் டெண்டுல்கரும் விராட் கோலியை கைதட்டி பாராட்டினார்.

பின்னர் விராட் கோலி 44 வது ஓவர் முடிய 9 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 113 பந்துகளில் 117 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக விளையாடி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 4 பௌண்டரீஸ் மற்றும் 8 சிக்சர்கள் என மொத்தமாக 70 பந்துகளில் 105 ரன்களை எடுத்து 49 வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக களமிறங்கிய கே.எல்.ராகுல் 5 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 20 பந்துகளில் 39 ரன்களை அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

49 வது ஓவரில் களமிறங்கிய சூரியகுமார் யாதவ் 1 ரன்னில் ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து ரிடைர் ஹுர்ட் மூலம் வெளியேறிய கில் மீண்டும் களமிறங்கினார்.

இதில் கில் 8 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் என மொத்தமாக 66 பந்துகளில் 80 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டிம் சவுத்தி 3 விக்கெட்களும், டிரெண்ட் போல்ட் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இறுதியாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 397 ரன்களை எடுத்துள்ளது. 398 ரன்கள் நியூசிலாந்து அணிக்கு அரையிறுதியை வெற்றி பெரும் இலக்காக உள்ளது.

Tags: icc world cup cricket
ShareTweetSendShare
Previous Post

காங்கிரஸிடம் வளர்ச்சிக்கான திட்டம் இல்லை: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Next Post

தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள் – கண்ணீரில் விவசாயிகள்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies