காங்கிரஸிடம் வளர்ச்சிக்கான திட்டம் இல்லை: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
Jun 24, 2026, 06:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸிடம் வளர்ச்சிக்கான திட்டம் இல்லை: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 15, 2023, 05:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் கட்சியிடம் தொலைநோக்குப் பார்வையோ, வளர்ச்சிக்கான திட்டமோ இல்லை என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டி இருக்கிறார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் வரும் 17-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

ஆகவே, ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள பா.ஜ.க.வும், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸும் பகீரத முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன. அதோடு, தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைவதால் இரு கட்சிகளின் தலைவர்களும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அதேசமயம், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருக்கிறார். இதனால், பிரதமரால் நேரடியாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடியவில்லை. எனவே, தனது எக்ஸ் சமூக வலைத்தளம் மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்திருக்கிறார்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “இந்த முறை மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம், பொதுமக்களிடம் ஆசிர்வாதம் பெறும் பிரசாரமாக மிகவும் சிறப்பாக இருந்தது. மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று பலரையும் சந்தித்து உரையாடினேன்.

பா.ஜ.க. மீது மக்கள் கொண்டுள்ள பாசம், வைத்திருக்கும் நம்பிக்கை, எங்களின் மிகப்பெரிய சொத்து. மத்தியப் பிரதேசத்தின் பெண் சக்தி இந்தத் தேர்தலில் களமிறங்கி பா.ஜ.க. கொடியை உயர்த்தி வருகிறது. பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது எப்படி பா.ஜ.க.வின் முன்னுரிமையாக இருக்கிறதோ, அதேபோல பா.ஜ.க. அரசு மீண்டும் வருவதையும் பெண்கள் முன்னுரிமையாகக் கொண்டுள்ளனர்.

இன்றைய புதிய தலைமுறை இந்தியாவின் அடுத்த 25 ஆண்டுகளையும் தங்கள் சொந்த 25 ஆண்டுகளையும் ஒன்றாகப் பார்க்கிறது. அதனால்தான் வளர்ந்த இந்தியா என்ற தீர்மானத்தை நிறைவேற்றும் பொறுப்பை நிறைவேற்ற நமது இளைஞர்களும் தோளோடு தோள் நின்று வருகிறார்கள்.

மத்தியப் பிரதேசத்தை 21-ம் நூற்றாண்டின் வளர்ச்சியடைந்த மத்தியப் பிரதேசமாக மாற்ற பா.ஜ.க.வால் மட்டுமே முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை மக்களிடம் உள்ளது. இரட்டை இன்ஜின் அரசாங்கத்தின் பலன்களை மத்தியப் பிரதேச மக்கள் பார்க்கிறார்கள். மேலும், மாநிலத்தின் தேவையையும் புரிந்துகொள்கிறார்கள்.

பேரணிகளின்போது, காங்கிரஸின் வம்ச அரசியல் மற்றும் எதிர்மறைத் தன்மையால், மத்தியப் பிரதேச மக்கள் எவ்வளவு கோபமாக உள்ளனர் என்பதையும் நான் கண்டேன். காங்கிரஸுக்கு தொலைநோக்கு பார்வையோ, மத்தியப் பிரதேச மாநில வளர்ச்சிக்கான பாதையோ இல்லை. வளர்ந்த மத்தியப் பிரதேசத்துக்கும், வளர்ந்த இந்தியாவுக்கும் பா.ஜ.க.வை தேர்வு செய்ய வேண்டும் என்று வாக்காளர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: PM ModiElectionMadya Pradesh
ShareTweetSendShare
Previous Post

சச்சின் முன்னிலையில் சச்சினின் சாதனையை முறியடித்த கோலி!

Next Post

நியூசிலாந்து பந்தை தெறிக்கவிட்ட இந்திய வீரர்கள் !

Related News

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies