இராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேர் விடுதலை!
Oct 3, 2025, 10:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேர் விடுதலை!

Web Desk by Web Desk
Nov 15, 2023, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் மீன்பிடிக்க சென்ற 22 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட் நிலையில், 21 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் செல்வதும், அவர்களின் விசைப்படகுகளைப் பறிமுதல் செய்வதும் வழக்கமான ஒன்றாகி விட்டது. அந்த வகையில் கடந்த மாதம் 14 மற்றும் 28-ஆம் தேதிகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற இராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த 64 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை 10 படகுகளையும் பறிமுதல் செய்தது.

தமிழக மீனவர்களை மீட்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. இதை அடுத்து முதல் கட்டமாக கடந்த 8-ஆம் தேதி 4 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

அடுத்ததாக கடந்த 9-ஆம் தேதி 38 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த இலங்கை மன்னார் நீதிமன்றம், இந்த தண்டனையை 5 வருடம் சென்ற பிறகு அனுபவிக்க வேண்டும் என்ற விநோத நிபந்தனையுடன் விடுதலை செய்தது.

இந்த நிலையில், சிறையில் உள்ள மீனவர்களின் சிறைக்காவல் தேதி முடிந்து, இன்று இலங்கை நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டனர். இதனை அடுத்து, 22 பேரில் 21 மீனவர்களை இலங்கை யாழ்ப்பாணம் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.

மீதமுள்ள ஒருவரான முருகன் என்பவர் இரண்டாவது முறையாக எல்லை தாண்டி வந்து மீன் பிடித்த வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. அதன் பின்னரும் எல்லை தாண்டினால் 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்று நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

மீதமுள்ள ஒரு மீனவர் இரண்டாவது முறையாக எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு 24 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதனை அடுத்து இன்னும் ஒரு சில தினங்களில் விடுதலை செய்யப்பட்டுள்ள 21 மீனவர்கள் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: srilankafishermen
ShareTweetSendShare
Previous Post

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் செந்தில் பாலாஜி – உண்மை நிலவரம் என்ன?

Next Post

திரையுலகில் புதிய சாதனை – 60 ஆண்டுகளைக் கடந்த கே.ஆர்.விஜயா!

Related News

இன்றைய தங்கம் விலை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவம் விழா – சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி!

கடினமான சூழல்களை தகர்த்தெறிந்து அனைவரின் நம்பிக்கையை பெற்ற ஆர்எஸ்எஸ் – ஸ்ரீ சங்கர விஜயேந்திர சுவாமிகள் புகழாரம்!

இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை தோல்வியில் மட்டுமே முடியும் – ரஷ்ய அதிபர் புதின் உறுதி!

சர்வதேச எல்லையான சர் கிரீக் பகுதியில் ராணுவ உள்கட்டமைப்பை அதிகரிக்கும் பாகிஸ்தான் – ராஜ்நாத்சிங் கண்டனம்!

ஜிஎஸ்டி வரி குறைப்பு – சென்னையில் கடைகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய மத்திய அமைச்சர் எல்.முருகன்!

Load More

அண்மைச் செய்திகள்

பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு தமிழக அரசு மற்றும் காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது சர்வாதிகார அடக்குமுறையின் உச்சம் – இந்து முன்னணி கண்டனம்!

மைசூரு தசரா விழா – ஜம்பு சவாரி கோலாகலம்!

குலசேகரன்பட்டினம் தசரா விழா – சூரசம்ஹாரம் கோலாகலம்!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான  முதல் டெஸ்ட் – இந்தியா அபாரம்!

இந்தியா – சீனா இடையே வரும் 26ம் தேதி முதல் நேரடி விமான சேவை!

கொலம்பியாவில் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு – மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

உலகத் தலைமையை ஏற்கும் நிலையை இந்தியா இன்னும் அடையவில்லை – கொலம்பியாவில் ராகுல்காந்தி சர்ச்சை பேச்சு!

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

ஆயுத பூஜை விடுமுறை – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies