சீனாவின் வளர்ச்சி தெற்காசியாவுக்கு ஆபத்து: ஆளுநர் ஆர்.என்.ரவி!
Mar 15, 2026, 09:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனாவின் வளர்ச்சி தெற்காசியாவுக்கு ஆபத்து: ஆளுநர் ஆர்.என்.ரவி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 16, 2023, 12:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவின் வளர்ச்சி என்பது தெற்காசியாவில் சிறிய நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருக்கிறார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியாவின் தலைமையில் ஜி-20 மாநாட்டின் தீர்மானங்களும், உலக நாடுகளின் வளர்ச்சியும்’ என்கிற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இக்கருத்தரங்கத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தலைமை விருந்தினராக கலந்துகொண்டார்.

அதேபோல, வளரும் நாடுகளுக்கான தொழில்நுட்ப நிறுவனமான ஆர்.ஐ.எஸ். டைரக்டர் ஜெனரல் சச்சின் சதுர்வேதி கௌரவ விருந்தினராகப் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் வரவேற்றார். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை சசிகலா நன்றி கூறினார்.

இக்கருத்தரங்கில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசுகையில், “எதிர்கால உலகின் வளர்ச்சிக்கு இந்தியாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. சர்வதேச அளவில் வறுமையை ஒழிப்பது, பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவது, தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்படுத்துவது, சூழலியல் மாற்றம் போன்ற முக்கிய சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.

உலகில் அதிகளவுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறிய நாடுகளில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. நாட்டின் கடைக்கோடி மனிதன் வரை தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிகிறது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில், சர்வதேச அளவில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.

வறுமை ஒழிப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி, காலநிலை மாற்றத்தை சமாளிப்பது போன்ற அனைத்திலும் மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக இந்தியா விளங்குகிறது.

கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த 100-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியா தயாரித்த குறைந்த விலை தடுப்பூசிகளை வாங்கி நிலைமையை சமாளித்தன.

ஆசியக் கண்டத்தில் சீனாவின் கடல் பகுதி மற்றொரு அச்சுறுத்தலாக விளங்குகிறது. தென் சீனக் கடல் பகுதியில் சீனாவின் பல்வேறு இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்திருக்கின்றன. தங்களைச் சுற்றியுள்ள சிறிய நாடுகளுக்கு நிதியுதவி அளிப்பதாகக் கூறி அந்நாடுகளில் சீனா அதிகாரம் செலுத்தத் தொடங்கி இருக்கிறது.

உதாரணமாக, இலங்கையின் உள்கட்டமைப்புக்கு கடனுதவி அளித்து அந்நாட்டில் துறைமுகம் கட்டி இருக்கிறது. இக்கடனை இலங்கை செலுத்த முடியாவிட்டால், இலங்கை சீனாவிடம் சரணடையும் நிலை ஏற்படும். அதேபோல், பாகிஸ்தானிலும் சீனாவின் செல்வாக்கு அதிகரிக்கிறது.

சீனாவின் வளர்ச்சி தெற்காசியாவின் சிறிய நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது. இந்த நிலையில்தான், இந்தியாவின் வளர்ச்சியும், தலைமைத்துவமும் உலகுக்குத் தேவைப்படுகின்றன” என்றார்.

Tags: chinaGovernor R.N.RaviSouth Asia
ShareTweetSendShare
Previous Post

புதுடெல்லி-தர்பாங்கா சிறப்பு எக்ஸ்பிரஸ் இரயிலில் தீ விபத்து!

Next Post

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரு.57 குறைப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies