சீனாவின் வளர்ச்சி தெற்காசியாவுக்கு ஆபத்து: ஆளுநர் ஆர்.என்.ரவி!
Jul 26, 2025, 07:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனாவின் வளர்ச்சி தெற்காசியாவுக்கு ஆபத்து: ஆளுநர் ஆர்.என்.ரவி!

Web Desk by Web Desk
Nov 16, 2023, 12:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவின் வளர்ச்சி என்பது தெற்காசியாவில் சிறிய நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருக்கிறார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியாவின் தலைமையில் ஜி-20 மாநாட்டின் தீர்மானங்களும், உலக நாடுகளின் வளர்ச்சியும்’ என்கிற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இக்கருத்தரங்கத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தலைமை விருந்தினராக கலந்துகொண்டார்.

அதேபோல, வளரும் நாடுகளுக்கான தொழில்நுட்ப நிறுவனமான ஆர்.ஐ.எஸ். டைரக்டர் ஜெனரல் சச்சின் சதுர்வேதி கௌரவ விருந்தினராகப் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் வரவேற்றார். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை சசிகலா நன்றி கூறினார்.

இக்கருத்தரங்கில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசுகையில், “எதிர்கால உலகின் வளர்ச்சிக்கு இந்தியாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. சர்வதேச அளவில் வறுமையை ஒழிப்பது, பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவது, தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்படுத்துவது, சூழலியல் மாற்றம் போன்ற முக்கிய சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.

உலகில் அதிகளவுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறிய நாடுகளில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. நாட்டின் கடைக்கோடி மனிதன் வரை தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிகிறது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில், சர்வதேச அளவில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.

வறுமை ஒழிப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி, காலநிலை மாற்றத்தை சமாளிப்பது போன்ற அனைத்திலும் மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக இந்தியா விளங்குகிறது.

கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த 100-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியா தயாரித்த குறைந்த விலை தடுப்பூசிகளை வாங்கி நிலைமையை சமாளித்தன.

ஆசியக் கண்டத்தில் சீனாவின் கடல் பகுதி மற்றொரு அச்சுறுத்தலாக விளங்குகிறது. தென் சீனக் கடல் பகுதியில் சீனாவின் பல்வேறு இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்திருக்கின்றன. தங்களைச் சுற்றியுள்ள சிறிய நாடுகளுக்கு நிதியுதவி அளிப்பதாகக் கூறி அந்நாடுகளில் சீனா அதிகாரம் செலுத்தத் தொடங்கி இருக்கிறது.

உதாரணமாக, இலங்கையின் உள்கட்டமைப்புக்கு கடனுதவி அளித்து அந்நாட்டில் துறைமுகம் கட்டி இருக்கிறது. இக்கடனை இலங்கை செலுத்த முடியாவிட்டால், இலங்கை சீனாவிடம் சரணடையும் நிலை ஏற்படும். அதேபோல், பாகிஸ்தானிலும் சீனாவின் செல்வாக்கு அதிகரிக்கிறது.

சீனாவின் வளர்ச்சி தெற்காசியாவின் சிறிய நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது. இந்த நிலையில்தான், இந்தியாவின் வளர்ச்சியும், தலைமைத்துவமும் உலகுக்குத் தேவைப்படுகின்றன” என்றார்.

Tags: Governor R.N.RaviSouth Asiachina
ShareTweetSendShare
Previous Post

புதுடெல்லி-தர்பாங்கா சிறப்பு எக்ஸ்பிரஸ் இரயிலில் தீ விபத்து!

Next Post

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரு.57 குறைப்பு!

Related News

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies