சீனாவின் வளர்ச்சி தெற்காசியாவுக்கு ஆபத்து: ஆளுநர் ஆர்.என்.ரவி!
Jul 26, 2026, 11:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனாவின் வளர்ச்சி தெற்காசியாவுக்கு ஆபத்து: ஆளுநர் ஆர்.என்.ரவி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 16, 2023, 12:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவின் வளர்ச்சி என்பது தெற்காசியாவில் சிறிய நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருக்கிறார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியாவின் தலைமையில் ஜி-20 மாநாட்டின் தீர்மானங்களும், உலக நாடுகளின் வளர்ச்சியும்’ என்கிற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இக்கருத்தரங்கத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தலைமை விருந்தினராக கலந்துகொண்டார்.

அதேபோல, வளரும் நாடுகளுக்கான தொழில்நுட்ப நிறுவனமான ஆர்.ஐ.எஸ். டைரக்டர் ஜெனரல் சச்சின் சதுர்வேதி கௌரவ விருந்தினராகப் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் வரவேற்றார். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை சசிகலா நன்றி கூறினார்.

இக்கருத்தரங்கில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசுகையில், “எதிர்கால உலகின் வளர்ச்சிக்கு இந்தியாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. சர்வதேச அளவில் வறுமையை ஒழிப்பது, பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவது, தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்படுத்துவது, சூழலியல் மாற்றம் போன்ற முக்கிய சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.

உலகில் அதிகளவுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறிய நாடுகளில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. நாட்டின் கடைக்கோடி மனிதன் வரை தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிகிறது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில், சர்வதேச அளவில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.

வறுமை ஒழிப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி, காலநிலை மாற்றத்தை சமாளிப்பது போன்ற அனைத்திலும் மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக இந்தியா விளங்குகிறது.

கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த 100-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியா தயாரித்த குறைந்த விலை தடுப்பூசிகளை வாங்கி நிலைமையை சமாளித்தன.

ஆசியக் கண்டத்தில் சீனாவின் கடல் பகுதி மற்றொரு அச்சுறுத்தலாக விளங்குகிறது. தென் சீனக் கடல் பகுதியில் சீனாவின் பல்வேறு இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்திருக்கின்றன. தங்களைச் சுற்றியுள்ள சிறிய நாடுகளுக்கு நிதியுதவி அளிப்பதாகக் கூறி அந்நாடுகளில் சீனா அதிகாரம் செலுத்தத் தொடங்கி இருக்கிறது.

உதாரணமாக, இலங்கையின் உள்கட்டமைப்புக்கு கடனுதவி அளித்து அந்நாட்டில் துறைமுகம் கட்டி இருக்கிறது. இக்கடனை இலங்கை செலுத்த முடியாவிட்டால், இலங்கை சீனாவிடம் சரணடையும் நிலை ஏற்படும். அதேபோல், பாகிஸ்தானிலும் சீனாவின் செல்வாக்கு அதிகரிக்கிறது.

சீனாவின் வளர்ச்சி தெற்காசியாவின் சிறிய நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது. இந்த நிலையில்தான், இந்தியாவின் வளர்ச்சியும், தலைமைத்துவமும் உலகுக்குத் தேவைப்படுகின்றன” என்றார்.

Tags: Governor R.N.RaviSouth Asiachina
ShareTweetSendShare
Previous Post

புதுடெல்லி-தர்பாங்கா சிறப்பு எக்ஸ்பிரஸ் இரயிலில் தீ விபத்து!

Next Post

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரு.57 குறைப்பு!

Related News

கார்கில் போர் வெற்றி தினம் – சென்னை போர்நினைவுச் சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மரியாதை!

வேறு வழி? – 3 மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்கட்சிகள் – நிமிடத்திற்கு ரூ.2.50 லட்சம் இழப்பு!

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

‘ விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைய தனியார் தொழில் முனைவோரின் பங்கு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

Load More

அண்மைச் செய்திகள்

பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் நாளை தாக்கல்!

முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது – CJP செய்தித்தொடர்பாளர் சௌரவ் தாஸ் பேட்டி!

மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை ஒதுக்கீடு!

முதலமைச்சரின் அலுவலகம் மாற்றம்; தயாராகும் நாமக்கல் மாளிகை

பதவி விலகினார் தர்மேந்திர பிரதான்; ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பினார்

தரகர் கூலியாக 10 பில்லியன் டாலர் நிதி உதவி : அமெரிக்காவிடம் கையேந்தும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை… நாட்டை சிதைக்காதீர்கள் – இந்திரேஷ் குமார்

மத்திய அமைச்சர்களுடன் கரப்பான் பூச்சி கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு!

மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் மீது தகுதி நீக்க நடவடிக்கை – சபாநாயகரிடம் அமமுக சார்பில் மனு!

எதிர்க்கட்சிகள் அமளி : திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies