சீனாவின் வளர்ச்சி தெற்காசியாவுக்கு ஆபத்து: ஆளுநர் ஆர்.என்.ரவி!
Sep 9, 2026, 11:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனாவின் வளர்ச்சி தெற்காசியாவுக்கு ஆபத்து: ஆளுநர் ஆர்.என்.ரவி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 16, 2023, 12:51 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சீனாவின் வளர்ச்சி என்பது தெற்காசியாவில் சிறிய நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருக்கிறார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியாவின் தலைமையில் ஜி-20 மாநாட்டின் தீர்மானங்களும், உலக நாடுகளின் வளர்ச்சியும்’ என்கிற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இக்கருத்தரங்கத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தலைமை விருந்தினராக கலந்துகொண்டார்.

அதேபோல, வளரும் நாடுகளுக்கான தொழில்நுட்ப நிறுவனமான ஆர்.ஐ.எஸ். டைரக்டர் ஜெனரல் சச்சின் சதுர்வேதி கௌரவ விருந்தினராகப் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் வரவேற்றார். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை சசிகலா நன்றி கூறினார்.

இக்கருத்தரங்கில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசுகையில், “எதிர்கால உலகின் வளர்ச்சிக்கு இந்தியாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. சர்வதேச அளவில் வறுமையை ஒழிப்பது, பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவது, தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்படுத்துவது, சூழலியல் மாற்றம் போன்ற முக்கிய சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.

உலகில் அதிகளவுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறிய நாடுகளில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. நாட்டின் கடைக்கோடி மனிதன் வரை தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிகிறது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில், சர்வதேச அளவில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.

வறுமை ஒழிப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி, காலநிலை மாற்றத்தை சமாளிப்பது போன்ற அனைத்திலும் மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக இந்தியா விளங்குகிறது.

கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த 100-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியா தயாரித்த குறைந்த விலை தடுப்பூசிகளை வாங்கி நிலைமையை சமாளித்தன.

ஆசியக் கண்டத்தில் சீனாவின் கடல் பகுதி மற்றொரு அச்சுறுத்தலாக விளங்குகிறது. தென் சீனக் கடல் பகுதியில் சீனாவின் பல்வேறு இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்திருக்கின்றன. தங்களைச் சுற்றியுள்ள சிறிய நாடுகளுக்கு நிதியுதவி அளிப்பதாகக் கூறி அந்நாடுகளில் சீனா அதிகாரம் செலுத்தத் தொடங்கி இருக்கிறது.

உதாரணமாக, இலங்கையின் உள்கட்டமைப்புக்கு கடனுதவி அளித்து அந்நாட்டில் துறைமுகம் கட்டி இருக்கிறது. இக்கடனை இலங்கை செலுத்த முடியாவிட்டால், இலங்கை சீனாவிடம் சரணடையும் நிலை ஏற்படும். அதேபோல், பாகிஸ்தானிலும் சீனாவின் செல்வாக்கு அதிகரிக்கிறது.

சீனாவின் வளர்ச்சி தெற்காசியாவின் சிறிய நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது. இந்த நிலையில்தான், இந்தியாவின் வளர்ச்சியும், தலைமைத்துவமும் உலகுக்குத் தேவைப்படுகின்றன” என்றார்.

Tags: chinaGovernor R.N.RaviSouth Asia
Share
Tweet
SendShare
Previous Post

புதுடெல்லி-தர்பாங்கா சிறப்பு எக்ஸ்பிரஸ் இரயிலில் தீ விபத்து!

Next Post

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரு.57 குறைப்பு!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies