புதுடெல்லி-தர்பாங்கா சிறப்பு எக்ஸ்பிரஸ் இரயிலில் தீ விபத்து!
Jul 29, 2026, 04:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுடெல்லி-தர்பாங்கா சிறப்பு எக்ஸ்பிரஸ் இரயிலில் தீ விபத்து!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 16, 2023, 12:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப் பிரதேச மாநிலம் எட்டாவா பகுதி அருகே புதுடெல்லி-தர்பாங்கா சிறப்பு எக்ஸ்பிரஸ் இரயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 பெட்டிகள் எரிந்து நாசமாகின.

புதுடெல்லியில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் வழியாக பீகார் மாநிலத்துக்கு புதுடெல்லி-தர்பாங்கா சிறப்பு எக்ஸ்பிரஸ் இரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த இரயில் வழக்கம்போல நேற்று புதுடெல்லியில் இருந்து புறப்பட்டு பீகார் மாநிலத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

உத்தரப் பிரதேச மாநிலம் எட்டாவா பகுதி அருகேயுள்ள சாராய்போபட் எனும் இரயில் நிலையத்தைக் கடந்து சென்றபோது, திடீரென இரயிலில் இருந்து புகை வந்தது. இதைக் கண்ட இன்ஜின் டிரைவர், உடனடியாக இரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துவிட்டு, அவசர அவசரமாக இரயிலை நிறுத்தினார்.

பின்னர், இரயிலில் இருந்து பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். ஆயினும், இச்சம்பவத்தில் 4 பயணிகள் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், இத்தீவிபத்தில் 3 இரயில் பெட்டிகள் எரிந்து நாசமாகி விட்டன.

இத்தீவிபத்து குறித்து எட்டாவா காவல்துறை கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் கூறுகையில், “டெல்லியில் இருந்து பீகார் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த இரயிலில் 3 பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மேலும், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்தில் உள்ளனர். இச்சம்பவத்தில் 4 பயணிகள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால், அவை தீக்காயங்களாகத் தெரியவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.

அதேசமயம், ஒரு பெட்டியில் மட்டுமே தீப்பிடித்ததாக வட மத்திய இரயில்வே நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து வட மத்திய இரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஹிமான்ஷு உபாத்யாய் கூறுகையில், “புதுடெல்லி-தர்பாங்கா சிறப்பு எக்ஸ்பிரஸ் இரயிலில் எஸ்-1 பெட்டியில் இருந்து புகை வெளியேறுவதை சாராய்போபட் சந்திப்பில் உள்ள காவலர் கவனித்திருக்கிறார்.

பின்னர், இரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். தற்போது வரை உயிர்ச்சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

Tags: Firedelhi-darbhanga express train
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு காஷ்மீரில் “சாவ் பர்வா” திருவிழா கோலாகலம்!

Next Post

சீனாவின் வளர்ச்சி தெற்காசியாவுக்கு ஆபத்து: ஆளுநர் ஆர்.என்.ரவி!

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies