ஜம்மு காஷ்மீரில் "சாவ் பர்வா" திருவிழா கோலாகலம்!
Jul 29, 2026, 03:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் “சாவ் பர்வா” திருவிழா கோலாகலம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 16, 2023, 12:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரிலுள்ள தாகூர் ஹாலில் ‘சாவ் பர்வா’ திருவிழாவை துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தொடங்கி வைத்தார். இது மேற்கு வங்கம், ஒடிஸா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களின் பாரம்பரிய நிகழ்ச்சியாகும்.

புதுடெல்லியைச் சேர்ந்த சங்கீத நாடக அகாடமி மற்றும் தேசிய இசை, நடனம் மற்றும் நாடக அகாடமி, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சாவ் கேந்திரா, சந்தங்கியாரி, பொகாரோ ஆகியவை இணைந்து, இந்த சாவ் நடனங்கள் மற்றும் நாட்டுப்புற நடனங்கள் குறித்த ‘சாவ் பர்வா’ திருவிழா, பயிற்சிப் பட்டறை மற்றும் கருத்தரங்கம் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்திருந்தன.

இந்நிகழ்ச்சியை ஜம்மு காஷ்மீர் மாநில துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தொடங்கி வைத்துப் பேசுகையில், “பண்டைய காலங்களில் சாவ் பர்வா ஒரு போர் நடனமாகவும், ஆன்மாவை மேம்படுத்தும் கலை வடிவமாகவும் கருதப்பட்டது. இந்து பாரம்பரியத்தின் அழகியல் முறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், இளைஞர்களின் திறமைகளை வளர்ப்பதையும், ஆன்மாவை வலுப்படுத்துவதையும் சாவ் பர்வா நடனம் நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

சாவ் பர்வா நடனத்துக்கு வரலாற்றில் தகுதியான அங்கீகாரம் வழங்கப்படவில்லை. எனினும், இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சங்கீத நாடக அகாடமி மற்றும் ஜம்மு காஷ்மீர் அகாடமியை நான் வாழ்த்த விரும்புகிறேன். அதோடு, ஜம்மு காஷ்மீர் கலைஞர்களுக்கும் இது ஒரு அற்புதமான கலாச்சார பரிமாற்றமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

தொடர்ந்து, பிர்சா முண்டாவுக்கு மரியாதை செலுத்திய துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, நாட்டின் சுதந்திர இயக்கத்திற்கு பழங்குடியின மக்களின் மகத்தான பங்களிப்பு குறித்து பேசினார். மேலும், ஜம்மு காஷ்மீரின் செழுமையான அருவ பாரம்பரியம் மற்றும் பாரம்பரிய கலாச்சாரத்தை புத்துயிர் பெறச் செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிகளையும் எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில், சங்கீத நாடக அகாடமியின் தலைவர் டாக்டர் சந்தியா புரேச்சா மற்றும் ஜம்மு காஷ்மீர் கலை, கலாச்சாரம் மற்றும் மொழிகள் அகாடமியின் செயலாளர் பாரத் சிங் மன்ஹாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். தவிர, ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் 200 பேர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த சாவ் பர்வா பயிற்சி பட்டறை 3 நாட்கள் நடைபெறுகிறது. இது மாநிலங்களுக்கு இடையேயான கலை பரிமாற்ற அனுபவத்தை வழங்குகிறது. மேலும், காஷ்மீரி கலைஞர்கள் பிற மாநிலங்களில் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான வாய்ப்புகளையும் அனுபவத்தையும் உருவாக்குகிறது.

Tags: Srinagarchhau parv festivalgovernor manoj sinha
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேல் இராணுவம் குறித்த தவறான செய்தி!

Next Post

புதுடெல்லி-தர்பாங்கா சிறப்பு எக்ஸ்பிரஸ் இரயிலில் தீ விபத்து!

Related News

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies