ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் பாஜக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வெளியிட்டார்.
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 25-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் ஜெய்ப்பூர் சென்ற பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, தேர்தல் அறிக்கை என்பது மற்ற கட்சிகளுக்கு வெறும் சம்பிரதாயம். ஆனால், பா.ஜக,வுக்கு, அது வளர்ச்சிக்கான வரைபடம். எனவே தேர்தல் அறிக்கை பேப்பரில் எழுதப்படும் வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல, அதனை நிறைவேற்றுவது தான் எங்கள் நோக்கம். நாங்கள் சொல்வதை செய்வோம் என்பதற்கு கடந்த கால வரலாறு சான்று என்று தெரிவித்தார்.