பிரதமர் மோடியின் கட் அவுட்டால் செல்ஃபி பாயின்ட்டாக மாறிய காஷ்மீரின் லால் சௌக்!
Jul 26, 2025, 10:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடியின் கட் அவுட்டால் செல்ஃபி பாயின்ட்டாக மாறிய காஷ்மீரின் லால் சௌக்!

Web Desk by Web Desk
Nov 16, 2023, 03:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரின் லால் சௌக் பகுதியிலுள்ள காந்தஹாரில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கட் அவுட் வைக்கப்பட்டிருப்பதால், அது செல்ஃபி பாயின்ட்டாக மாறி இருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதம் தலைவிரித்தாடிய நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு அம்மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. மேலும், அம்மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. இதன் பிறகு, தீவிரவாதத்தையும், தீவிரவாதிகளையும் ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியது. இதன் பயனாக தற்போது ஜம்மு காஷ்மீர் அமைதிப் பூங்காவாக மாறி இருக்கிறது.

காஷ்மீரில் தீவிரவாதம் தலைவிரித்தாடியபோது, மக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படுவார்கள். இதனால், அம்மாநிலத்தில் அடிப்படை வசதிகளைக்கூட செய்ய முடியாமல் அரசு தடுமாறியது. ஆனால், தற்போது ஜம்மு காஷ்மீரில் ஏராளமான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மக்களும் தைரியமாகவும் சுதந்திரமாகவும் நடமாடத் தொடங்கி இருக்கிறார்கள். அதோடு, சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்திருக்கிறது.

இந்த சூழலில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரின் லால் சௌக் பகுதியிலுள்ள காந்தஹாரில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் முழு அளவு கட் அவுட் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த கட் அவுட்தான் உள்ளூர் மக்களையும், சுற்றுலாப் பயணிகளையும் வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. ஆகவே, இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் வாசிகளும் பிரதமரின் கட் அவுட் முன்பு நின்று செல்ஃபி எடுத்துச் செல்கிறார்கள். இதனால், அந்த இடமே செல்ஃபி பாயின்ட்டாக மாறி இருக்கிறது.

இதுகுறித்து கர்நாடகாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி தினேஷ் கூறுகையில், “நான் காஷ்மீருக்கு வருவது இது 2-வது முறையாகும். முன்பு வந்தபோது பார்த்ததை விட தற்போது ஜம்மு காஷ்மீர் நிறைய வளர்ச்சிகளை கண்டிருக்கிறது. சாலைகள், சுரங்கப் பாதைகள் உள்ளிட்டவற்றைப் பார்க்கும்போது மிகவும் நன்றாக இருக்கிறது. இந்த வளர்ச்சிக்குக் காரணமாக பிரதமர் மோடியின் கட்-அவுட்டைப் பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

அதேபோல, கார்கில் பகுதியில் வசிக்கும் முகமது தாகி கூறுகையில், “ஸ்ரீநகரை பார்வையிட வந்தேன். பிரதமர் மோடியின் கட்-அவுட்டைப் பார்த்ததும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். உடனே, பிரதமர் கட் அவுட்டுடன் ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டோம்” என்றார்.

மற்றொரு சுற்றுலாப் பயணியான பெங்களூருவைச் சேர்ந்த சேத்தன் கூறுகையில், “காஷ்மீருக்கு சுற்றுலா வந்த நாங்கள் லால் சௌக்கைப் பார்க்க வந்தோம். பிரதமர் மோடியின் கட்-அவுட்டைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தோம். இன்றைய காஷ்மீர் நன்றாகவே இருக்கிறது. எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது” என்றார்.

மும்பையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி நீல் ஷா கூறுகையில், “நாங்கள் காஷ்மீரில் உள்ள அனைத்து இடங்களுக்கும் சென்றோம். ஆனால், பிரதமர் மோடியின் இந்த கட் அவுட் சுவாரஸ்யமானது. நாங்கள் முதல் முறையாக ஸ்ரீநகரில் இதைப் பார்க்கிறோம். இந்தியப் பிரதமரின் கட்-அவுட் இங்கு நிறுவப்பட்டிருப்பது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது” என்றார்.

Tags: PM Modijammu kashmirCut out
ShareTweetSendShare
Previous Post

பணம் பெற்று இந்தியாவுக்கு எதிராக செய்திகள் வெளியிட்ட விவகாரம்!

Next Post

விவசாயிகளுக்கு எதிராக திமுக செயல்பட்டு வருகிறது! – அண்ணாமலை

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies