ஊர் திரும்ப காத்திருக்கிறேன்: காஸாவில் மீட்கப்பட்ட காஷ்மீர் பெண்!
Jul 24, 2025, 06:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊர் திரும்ப காத்திருக்கிறேன்: காஸாவில் மீட்கப்பட்ட காஷ்மீர் பெண்!

Web Desk by Web Desk
Nov 17, 2023, 12:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் தாக்குதலுக்கு மத்தியில் காஸா நகரில் இருந்து காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மீட்கப்பட்டிருக்கிறார். அவர், சொந்த ஊர் திரும்ப ஆவலுடன் காத்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.

இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணைத் தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி கண்ணில் பட்டவர்கள் மீதெல்லாம் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

மேலும், வெளிநாட்டினர் உட்பட 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். இத்தாக்குதலில் வெளிநாட்டினர் உட்பட 1,400 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் தீவிரவாதிகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இத்தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம், தீவிரவாத முகாம்கள் உட்பட 1,500-க்கும் மேற்பட்ட இலக்குகளை இஸ்ரேல் இராணுவம் அழித்திருக்கிறது. மேலும், ஹமாஸ் தீவிரவாதிகளின் முக்கியத் தலைவர்கள், தளபதிகள், தீவிரவாதிகள் 750 பேர் உட்பட 11,500 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

காஸாவில் போர் உக்கிரம் அடைந்திருப்பதைத் தொடர்ந்து, அங்கு வசிக்கும் இந்தியர்கள் தங்களை பத்திரமாக மீட்குமாறு மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் எகிப்து நாட்டின் கெய்ரோவில் இருக்கும் இந்தியத் தூதரங்கள் மூலம் இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், காஸா நகரில் வசித்து வந்த காஷ்மீரைச் சேர்ந்த லுப்னா நசீர் ஷாபூ என்கிற பெண்ணும், அவரது மகள் கரிமாவும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இவர்கள் கடந்த 13-ம் தேதி காஸா எல்லையைக் கடந்து எகிப்தின் கெய்ரோ நகரைச் சென்றடைந்தனர். தற்போது, இருவரும் கெய்ரோவிலிருந்து காஷ்மீர் திரும்ப இருப்பதாக லுப்னா கூறியிருக்கிறார்.

இதுகுறித்து லுப்னா அளித்த பேட்டியில், “காஸாவில் இருந்து ரபா எல்லை வழியாக பத்திரமாக வந்தோம். தற்போது காஷ்மீர் திரும்புவதற்காக காத்திருக்கிறேன். காசாவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

தண்ணீர், மின்சாரம் அல்லது இன்டர்நெட் எதுவுமே இல்லை. தொலைத்தொடர்பு மிகவும் மோசமாக இருந்தது. ஆகவே, காஸா நகரில் நாங்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்தோம்.

நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. தினம் தினம் செத்து மடிவோரும் உண்டு, காயமடைபவர்களும் உண்டு, இடிபாடுகளுக்கு அடியில் கிடப்பவர்களும் உண்டு. என்னை பத்திரமாக மீட்டதற்காக மத்திய அரசுக்கும், இந்திய தூதரகங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

Tags: KazaKashmir lady
ShareTweetSendShare
Previous Post

இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஆஸ்திரேலியா !

Next Post

கேதார்நாத் கோவில் நடை அடைப்பு: காரணம் என்ன?

Related News

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

Load More

அண்மைச் செய்திகள்

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies