ஊர் திரும்ப காத்திருக்கிறேன்: காஸாவில் மீட்கப்பட்ட காஷ்மீர் பெண்!
Jan 14, 2026, 03:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊர் திரும்ப காத்திருக்கிறேன்: காஸாவில் மீட்கப்பட்ட காஷ்மீர் பெண்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 17, 2023, 12:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் தாக்குதலுக்கு மத்தியில் காஸா நகரில் இருந்து காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மீட்கப்பட்டிருக்கிறார். அவர், சொந்த ஊர் திரும்ப ஆவலுடன் காத்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.

இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணைத் தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி கண்ணில் பட்டவர்கள் மீதெல்லாம் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

மேலும், வெளிநாட்டினர் உட்பட 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். இத்தாக்குதலில் வெளிநாட்டினர் உட்பட 1,400 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் தீவிரவாதிகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இத்தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம், தீவிரவாத முகாம்கள் உட்பட 1,500-க்கும் மேற்பட்ட இலக்குகளை இஸ்ரேல் இராணுவம் அழித்திருக்கிறது. மேலும், ஹமாஸ் தீவிரவாதிகளின் முக்கியத் தலைவர்கள், தளபதிகள், தீவிரவாதிகள் 750 பேர் உட்பட 11,500 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

காஸாவில் போர் உக்கிரம் அடைந்திருப்பதைத் தொடர்ந்து, அங்கு வசிக்கும் இந்தியர்கள் தங்களை பத்திரமாக மீட்குமாறு மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் எகிப்து நாட்டின் கெய்ரோவில் இருக்கும் இந்தியத் தூதரங்கள் மூலம் இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், காஸா நகரில் வசித்து வந்த காஷ்மீரைச் சேர்ந்த லுப்னா நசீர் ஷாபூ என்கிற பெண்ணும், அவரது மகள் கரிமாவும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இவர்கள் கடந்த 13-ம் தேதி காஸா எல்லையைக் கடந்து எகிப்தின் கெய்ரோ நகரைச் சென்றடைந்தனர். தற்போது, இருவரும் கெய்ரோவிலிருந்து காஷ்மீர் திரும்ப இருப்பதாக லுப்னா கூறியிருக்கிறார்.

இதுகுறித்து லுப்னா அளித்த பேட்டியில், “காஸாவில் இருந்து ரபா எல்லை வழியாக பத்திரமாக வந்தோம். தற்போது காஷ்மீர் திரும்புவதற்காக காத்திருக்கிறேன். காசாவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

தண்ணீர், மின்சாரம் அல்லது இன்டர்நெட் எதுவுமே இல்லை. தொலைத்தொடர்பு மிகவும் மோசமாக இருந்தது. ஆகவே, காஸா நகரில் நாங்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்தோம்.

நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. தினம் தினம் செத்து மடிவோரும் உண்டு, காயமடைபவர்களும் உண்டு, இடிபாடுகளுக்கு அடியில் கிடப்பவர்களும் உண்டு. என்னை பத்திரமாக மீட்டதற்காக மத்திய அரசுக்கும், இந்திய தூதரகங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

Tags: KazaKashmir lady
ShareTweetSendShare
Previous Post

இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஆஸ்திரேலியா !

Next Post

கேதார்நாத் கோவில் நடை அடைப்பு: காரணம் என்ன?

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies