ஊர் திரும்ப காத்திருக்கிறேன்: காஸாவில் மீட்கப்பட்ட காஷ்மீர் பெண்!
Jul 29, 2026, 07:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊர் திரும்ப காத்திருக்கிறேன்: காஸாவில் மீட்கப்பட்ட காஷ்மீர் பெண்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 17, 2023, 12:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் தாக்குதலுக்கு மத்தியில் காஸா நகரில் இருந்து காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மீட்கப்பட்டிருக்கிறார். அவர், சொந்த ஊர் திரும்ப ஆவலுடன் காத்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.

இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணைத் தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி கண்ணில் பட்டவர்கள் மீதெல்லாம் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

மேலும், வெளிநாட்டினர் உட்பட 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். இத்தாக்குதலில் வெளிநாட்டினர் உட்பட 1,400 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் தீவிரவாதிகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இத்தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம், தீவிரவாத முகாம்கள் உட்பட 1,500-க்கும் மேற்பட்ட இலக்குகளை இஸ்ரேல் இராணுவம் அழித்திருக்கிறது. மேலும், ஹமாஸ் தீவிரவாதிகளின் முக்கியத் தலைவர்கள், தளபதிகள், தீவிரவாதிகள் 750 பேர் உட்பட 11,500 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

காஸாவில் போர் உக்கிரம் அடைந்திருப்பதைத் தொடர்ந்து, அங்கு வசிக்கும் இந்தியர்கள் தங்களை பத்திரமாக மீட்குமாறு மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் எகிப்து நாட்டின் கெய்ரோவில் இருக்கும் இந்தியத் தூதரங்கள் மூலம் இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், காஸா நகரில் வசித்து வந்த காஷ்மீரைச் சேர்ந்த லுப்னா நசீர் ஷாபூ என்கிற பெண்ணும், அவரது மகள் கரிமாவும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இவர்கள் கடந்த 13-ம் தேதி காஸா எல்லையைக் கடந்து எகிப்தின் கெய்ரோ நகரைச் சென்றடைந்தனர். தற்போது, இருவரும் கெய்ரோவிலிருந்து காஷ்மீர் திரும்ப இருப்பதாக லுப்னா கூறியிருக்கிறார்.

இதுகுறித்து லுப்னா அளித்த பேட்டியில், “காஸாவில் இருந்து ரபா எல்லை வழியாக பத்திரமாக வந்தோம். தற்போது காஷ்மீர் திரும்புவதற்காக காத்திருக்கிறேன். காசாவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

தண்ணீர், மின்சாரம் அல்லது இன்டர்நெட் எதுவுமே இல்லை. தொலைத்தொடர்பு மிகவும் மோசமாக இருந்தது. ஆகவே, காஸா நகரில் நாங்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்தோம்.

நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. தினம் தினம் செத்து மடிவோரும் உண்டு, காயமடைபவர்களும் உண்டு, இடிபாடுகளுக்கு அடியில் கிடப்பவர்களும் உண்டு. என்னை பத்திரமாக மீட்டதற்காக மத்திய அரசுக்கும், இந்திய தூதரகங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

Tags: KazaKashmir lady
ShareTweetSendShare
Previous Post

இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஆஸ்திரேலியா !

Next Post

கேதார்நாத் கோவில் நடை அடைப்பு: காரணம் என்ன?

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies