ஊர் திரும்ப காத்திருக்கிறேன்: காஸாவில் மீட்கப்பட்ட காஷ்மீர் பெண்!
Sep 13, 2026, 03:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊர் திரும்ப காத்திருக்கிறேன்: காஸாவில் மீட்கப்பட்ட காஷ்மீர் பெண்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 17, 2023, 12:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஸ்ரேல் தாக்குதலுக்கு மத்தியில் காஸா நகரில் இருந்து காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மீட்கப்பட்டிருக்கிறார். அவர், சொந்த ஊர் திரும்ப ஆவலுடன் காத்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.

இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணைத் தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி கண்ணில் பட்டவர்கள் மீதெல்லாம் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

மேலும், வெளிநாட்டினர் உட்பட 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். இத்தாக்குதலில் வெளிநாட்டினர் உட்பட 1,400 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் தீவிரவாதிகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இத்தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம், தீவிரவாத முகாம்கள் உட்பட 1,500-க்கும் மேற்பட்ட இலக்குகளை இஸ்ரேல் இராணுவம் அழித்திருக்கிறது. மேலும், ஹமாஸ் தீவிரவாதிகளின் முக்கியத் தலைவர்கள், தளபதிகள், தீவிரவாதிகள் 750 பேர் உட்பட 11,500 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

காஸாவில் போர் உக்கிரம் அடைந்திருப்பதைத் தொடர்ந்து, அங்கு வசிக்கும் இந்தியர்கள் தங்களை பத்திரமாக மீட்குமாறு மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் எகிப்து நாட்டின் கெய்ரோவில் இருக்கும் இந்தியத் தூதரங்கள் மூலம் இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், காஸா நகரில் வசித்து வந்த காஷ்மீரைச் சேர்ந்த லுப்னா நசீர் ஷாபூ என்கிற பெண்ணும், அவரது மகள் கரிமாவும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இவர்கள் கடந்த 13-ம் தேதி காஸா எல்லையைக் கடந்து எகிப்தின் கெய்ரோ நகரைச் சென்றடைந்தனர். தற்போது, இருவரும் கெய்ரோவிலிருந்து காஷ்மீர் திரும்ப இருப்பதாக லுப்னா கூறியிருக்கிறார்.

இதுகுறித்து லுப்னா அளித்த பேட்டியில், “காஸாவில் இருந்து ரபா எல்லை வழியாக பத்திரமாக வந்தோம். தற்போது காஷ்மீர் திரும்புவதற்காக காத்திருக்கிறேன். காசாவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

தண்ணீர், மின்சாரம் அல்லது இன்டர்நெட் எதுவுமே இல்லை. தொலைத்தொடர்பு மிகவும் மோசமாக இருந்தது. ஆகவே, காஸா நகரில் நாங்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்தோம்.

நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. தினம் தினம் செத்து மடிவோரும் உண்டு, காயமடைபவர்களும் உண்டு, இடிபாடுகளுக்கு அடியில் கிடப்பவர்களும் உண்டு. என்னை பத்திரமாக மீட்டதற்காக மத்திய அரசுக்கும், இந்திய தூதரகங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

Tags: KazaKashmir lady
Share
Tweet
SendShare
Previous Post

இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஆஸ்திரேலியா !

Next Post

கேதார்நாத் கோவில் நடை அடைப்பு: காரணம் என்ன?

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies