ஜம்மு காஷ்மீரில் 5 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் என்கவுன்ட்டர்!
Jul 24, 2025, 09:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 5 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் என்கவுன்ட்டர்!

Web Desk by Web Desk
Nov 17, 2023, 01:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 5 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் தலைவிரித்தாடிய நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு அம்மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதன் பிறகு, தீவிரவாதிகளையும், தீவிரவாதத்தையும் ஒடுக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.

இதற்காக, இராணுவம், துணை இராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் மாநில காவல்துறை அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவினர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் சல்லடை போட்டுத் தேடி தீவிரவாதிகளை கைது செய்தனர். அதேசமயம், அடங்க மறுத்து அத்துமீறும் தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் போட்டுத் தள்ளப்பட்டனர்.

எனவே, ஜம்மு காஷ்மீரில் இருந்த தீவிரவாதிகள், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளுக்குச் சென்று பதுங்கிக் கொண்டனர். இதனால், மாநிலத்தில் தீவிரவாதம் படிப்படியாகக் குறைந்து வருகிறது.

அதேசமயம், உள்ளூரில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகள், அவ்வப்போது அத்துமீறி கூட்டு நடவடிக்கைக் குழுவினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், கடந்த செப்டம்பர் மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இராணுவ கர்னல், மேஜர், இராணுவ வீரர், மாநில காவல்துறை டி.எஸ்.பி. ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து, மாநிலத்தில் மீண்டும் தீவிரவாத வேட்டை தொடங்கி இருக்கிறது.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக நேற்று ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, இராணுவத்தின் 34 ராஷ்டிரிய ரைஃபிள்ஸ், 9 பாரா (உயர் சிறப்புப் படை பிரிவு), மாநில போலீஸ் மற்றும் சி.ஆர்.பி.எஃப். ஆகியோர் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. நேற்று முழுவதும் நடந்த தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகள் யாரும் சிக்கவில்லை.

இதையடுத்து, இன்று காலையும் தேடுதல் வேட்டை தொடர்ந்தது. குல்காம் மாவட்டம் நெஹாமா பகுதியில் உள்ள சாம்னோ என்ற இடத்தில் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் திடீரென பாதுகாப்புப் படையினரை நோக்கித் துப்பாக்கிச்சூடு நடத்தினர். எனவே, கூட்டு நடவடிக்கைக் குழுவினரும் பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இத்தாக்குதலில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகள் அனைவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறை தெரிவித்திருக்கிறது.

மேலும், கொல்லப்பட்ட நபர்களிடம் இருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயதங்கள் மற்றும் வெடி பொருட்கள் மீட்கப்பட்டதாகவும் காவல்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும், கொல்லப்பட்டவர்களின் பெயர் விவரங்கள் எதுவும் தற்போது வரை வெளிவரவில்லை.

Tags: encounterjammu kashmirkilled5 terrorist
ShareTweetSendShare
Previous Post

திருவண்ணாமலையில் நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! – அண்ணாமலை அறிவிப்பு!

Next Post

ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் பூஜ்யம் இலக்கு!

Related News

ஆடி அமாவாசை – சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல 3 நாட்களுக்கு அனுமதி!

பட்டீஸ்வரர் கோயிலில் நடை அடைக்கப்பட்ட பின் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட விவகாரம் – பணியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

பிரதமர் வருகையை முன்னிட்டு கங்கை கொண்ட சோழபுரத்தில் ஹெலிபேட் தயார் செய்யும் பணி தீவிரம்!

திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்களை விரட்டி அடிக்கும் பொதுமக்கள் – ஹெச்.ராஜா

கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும் என்பதே பாஜகவின் முதன்மை நோக்கம் – அண்ணாமலை

கிட்னி திருட்டில் தொடர்புடைய தனியார் மருத்துவமனை திமுக எம்.எல்.ஏவுக்கு சொந்தமானது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இரு மருத்துவமனைகளுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies