ஜம்மு காஷ்மீரில் 5 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் என்கவுன்ட்டர்!
Mar 15, 2026, 07:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 5 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் என்கவுன்ட்டர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 17, 2023, 01:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 5 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் தலைவிரித்தாடிய நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு அம்மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதன் பிறகு, தீவிரவாதிகளையும், தீவிரவாதத்தையும் ஒடுக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.

இதற்காக, இராணுவம், துணை இராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் மாநில காவல்துறை அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவினர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் சல்லடை போட்டுத் தேடி தீவிரவாதிகளை கைது செய்தனர். அதேசமயம், அடங்க மறுத்து அத்துமீறும் தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் போட்டுத் தள்ளப்பட்டனர்.

எனவே, ஜம்மு காஷ்மீரில் இருந்த தீவிரவாதிகள், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளுக்குச் சென்று பதுங்கிக் கொண்டனர். இதனால், மாநிலத்தில் தீவிரவாதம் படிப்படியாகக் குறைந்து வருகிறது.

அதேசமயம், உள்ளூரில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகள், அவ்வப்போது அத்துமீறி கூட்டு நடவடிக்கைக் குழுவினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், கடந்த செப்டம்பர் மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இராணுவ கர்னல், மேஜர், இராணுவ வீரர், மாநில காவல்துறை டி.எஸ்.பி. ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து, மாநிலத்தில் மீண்டும் தீவிரவாத வேட்டை தொடங்கி இருக்கிறது.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக நேற்று ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, இராணுவத்தின் 34 ராஷ்டிரிய ரைஃபிள்ஸ், 9 பாரா (உயர் சிறப்புப் படை பிரிவு), மாநில போலீஸ் மற்றும் சி.ஆர்.பி.எஃப். ஆகியோர் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. நேற்று முழுவதும் நடந்த தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகள் யாரும் சிக்கவில்லை.

இதையடுத்து, இன்று காலையும் தேடுதல் வேட்டை தொடர்ந்தது. குல்காம் மாவட்டம் நெஹாமா பகுதியில் உள்ள சாம்னோ என்ற இடத்தில் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் திடீரென பாதுகாப்புப் படையினரை நோக்கித் துப்பாக்கிச்சூடு நடத்தினர். எனவே, கூட்டு நடவடிக்கைக் குழுவினரும் பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இத்தாக்குதலில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகள் அனைவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறை தெரிவித்திருக்கிறது.

மேலும், கொல்லப்பட்ட நபர்களிடம் இருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயதங்கள் மற்றும் வெடி பொருட்கள் மீட்கப்பட்டதாகவும் காவல்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும், கொல்லப்பட்டவர்களின் பெயர் விவரங்கள் எதுவும் தற்போது வரை வெளிவரவில்லை.

Tags: 5 terroristencounterjammu kashmirkilled
ShareTweetSendShare
Previous Post

திருவண்ணாமலையில் நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! – அண்ணாமலை அறிவிப்பு!

Next Post

ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் பூஜ்யம் இலக்கு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies